CM Press Meet : கஜா புயலால் புதுக்கோட்டையில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய , போலீசார் துணையுடன் முதல்வர் எடப்பாடி ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வரை மக்கள் நெருங்காதவாறு போலீசார் பாதுகாப்பு அளித்தனர். புதுக்கோட்டை புயல் சேதத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,” புதுக்கோட்டையில் பெரும் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கஜா புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. மேலும் மத்திய அரசிடம் தேவையான நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு கூறினார்.
மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க கோரிக்கை விடுத்து உள்ளது.
நிவாரண நிதியை பெற பிரதமரை சந்திக்க இருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், பிரதமரை சந்திக்க நாளை மறுநாள் நேரம் கேட்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் பாதிக்கபட்ட மக்களுக்கு அனைவரும் ஒன்றிணைந்து உதவி செய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.