நடிகர் ஜெயம் ரவி சிறந்த நடிகர். தமிழ்த்திரையை பொறுத்த வரையில், அவர் படிப்படியாக முன்னேறி இன்று தனக்கென தனித்துவ இடம் பிடித்துள்ளார் என்றால் அது மிகையல்ல. இந்த நிலையில், அண்மைக் காலமாக தமிழ்த்திரையை மறந்து விட்டாரா? மும்பையில் செட்டில் ஆகி விட்டாரா? என்ற கேள்விகளுக்கு மனம் திறந்த விளக்கம் அளித்துள்ளார். அவை என்னன்னு பார்ப்போம்..
ஜெயம் ரவியும், ஆர்த்தியும் பிரிந்துவிட்டது அனைவருக்கும் தெரியும். அது அவர்களது பெர்சனல் விஷயம். இந்த நிலையில், ஜெயம் ரவி சென்னையில் இருந்து மும்பைக்கு சென்றுவிட்டார். மும்பை விமான நிலையத்தில் ஜெயம் ரவியை பார்த்த புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுத்து வெளியிட்டார்கள்.
மேலும், அவர்கள் எடுத்த வீடியோவும் வைரலானது.மும்பை புகைப்படக் கலைஞர்களுடன் அழகாக இந்தியில் பேசினார் ஜெயம் ரவி. மேலும், மும்பையில் இருக்கும் ஸ்டுடியோ ஒன்றுக்கு ஜெயம் ரவி சென்றபோது, எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியானது.
இந்த சூழலில், ஜெயம் ரவியை தேடி பாலிவுட் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன எனவும், இனிமேல் அவர் பாலிவுட் படங்களில் மட்டும் தான் நடிப்பார் எனவும், ஏற்கனவே இரண்டு இந்தி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார் என்றெல்லாம் என பேச்சு கிளம்பியது. இது குறித்து ஜெயம் ரவி கூறியிருப்பதாவது;
‘பாலிவுட் படங்களில் நடிப்பது தொடர்பாக சில அழைப்புகள் வந்தது. சந்திப்புகள் நடந்தது. முன்பும் கூட பாலிவுட் பட வாய்ப்பு வந்தது. டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் வந்தது. என் கதாபாத்திரம் பிடிக்காததால் நடிக்கவில்லை. தமிழில் நல்லா இருக்குனு விட்டுட்டேன். அங்கே போய் செகண்ட் ஹீரோவாக நடிக்கணுமா? என நினைத்தேன்.
முக்கியமாக குறிப்பிடுவது, நான் தமிழ் படங்களை விட்டுட்டு போகவில்லை. அது எக்ஸ்ட்ரா. தமிழ் படங்களுடன் சேர்த்து, இந்தி படங்களிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்கான முயற்சிகள் போய்க் கொண்டிருக்கிறது.
முன்பு வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டேன். தற்போது, அந்த வாய்ப்புகளை பயன்படுத்த விரும்புகிறேன். அங்கே வேலை செய்ய வேண்டும் என்றால், மும்பையில் கொஞ்ச காலம் இருந்து தான் ஆக வேண்டும்’ என்றார்.
கை நிறைய தமிழ் படங்கள் வைத்திருக்கிறார் ஜெயம் ரவி. அவர் தன்னை மதிப்பு கொடுத்து வளர்த்துவிட்ட தமிழ் திரையுலகை விட்டு, ஒருபோதும் போக மாட்டேன் என கூறியிருப்பது கோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.
இந்நிலையில் அக்கா, தம்பி உறவை கொண்டாடும் ‘பிரதர்’ படம் தீபாவளி பண்டிகைக்கு (அக்டோபர் 31-ம் தேதி) ரிலீஸாகவிருக்கிறது.
பெயருக்கேற்ப முயற்சிகள் ஜெயமாகட்டும்.!