ரஜினியை வம்பு இழுக்கும் வகையில் ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக உள்ளது.ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்த வருகிறார். சமீபத்தில் உடல்நல குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சி வீடு திரும்பிய அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார். இன்னும் ஒரு சில வாரங்கள் ஓய்வில் இருந்த பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்தை வம்பு இழுக்கும் வகையில் முழு சட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில், ஆயுத பூஜைக்கு வரவேண்டிய கங்குவாவை விரட்டிவிட்டு என் படத்தை ரிலீஸ் செய்றேன். கைதி2 பண்ண வேண்டிய லோகேஷை கைது பண்ணி கூலி படம் எடுக்க வைக்கிறேன்.விஜய் பட டைரக்டர்கள் ஏஆர்எம், நெல்சன், லொகேஷை, என் ப்ராஜெக்ட்டுக்கு கொண்டு வந்தேன். என் அடுத்த டார்கெட் எச்.வினோத் எப்படி என் சாணக்கிய தந்திரம்? என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு ரஜினி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களும் பதிலுக்கு விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.