BJP Victory : பா.ஜ.க அரசு அபார வெற்றி பெற்றது குறித்து ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 345 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால் மோடி தலைமயிலான பா.ஜ.க அரசு மத்தியில் தொடர்ந்து ஆட்சி செய்ய இருப்பது உறுதியாகி விட்டது.
பா.ஜ.க-வின் வெற்றிக்கு ராகுல் காந்தி வாழ்த்து கூறியுள்ளார். மேலும் மக்களின் தீர்ப்புக்கு எவ்வித காரணத்தையும் கூறி அதற்கு சாயம் பூச விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலினும் பா.ஜ.க வுக்கும் மோடிக்கும் வாழ்த்து கூறியுள்ளார். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம். மக்களுக்காக குரல் கொடுப்போம் எனவும் கூறியுள்ளார்.
With folded hands, we accept the resounding victory given to the DMK alliance by the people of Tamil Nadu. During the next five years, we will work hard to fulfill the promises made and protect the interest of our state!
— M.K.Stalin (@mkstalin) May 23, 2019
I congratulate Prime Minister Narendra Modi on his victory. We hope and wish he will provide a progressive government based on the principles of democracy and inclusivity.
— M.K.Stalin (@mkstalin) May 23, 2019
தலை வணக்கம் தமிழகமே!
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!
— M.K.Stalin (@mkstalin) May 23, 2019