BJP leader H Raja
BJP leader H Raja

BJP leader H Raja – சென்னை: வெற்றியில் அடக்கமும், தோல்வியில் எழுச்சியும் தேவை என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா 5மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை துவங்கப்பட்டது. இதில் 114 தொகுதிகள் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேலும் தேர்தல் முடிவுகளில், பாஜக சொல்லி கொள்ளும் அளவுக்கு வெற்றியை பெறவில்லை.

இதனால் தமிழக பாஜக தலைவர்கள், இதனை பற்றி எதுவும் கூறாது அமைதி காத்தனர்.

இருப்பினும், தமிழிசை சவுந்தரராஜன் மட்டும் நேற்று,தேர்தல் தோல்வி வெற்றிகரமான தோல்வி என்று தனது கருத்தை சொல்லி இருந்தார.

இந்நிலையில், பாஜக தோல்வி குறித்து ஒரு நாள் கழித்து வாய் திறந்துள்ளார் எச்.ராஜா.மேலும் இது குறித்து ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, ” ஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த தேர்தலில் கட்சிக்காக அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பணியாற்றிய அனைத்து செயல்வீரர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

மேலும் வெற்றியில் அடக்கமும், தோல்வியில் எழுச்சியும் தேவை ” இவ்வாறு பதிவிட்டிருந்தார்.