ஜாக்லின் மற்றும் ஆண் போட்டியாளர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ,பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் ஆண் போட்டியாளர்கள் ஷாப்பிங் டாஸ்க்கில் தோற்றுப் போனதால் தர்ஷா அவர்களிடம் கோபமாக நடந்து கொண்டார்..

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ஜாக்லின் ஆண்களின் அனுமதியின்றி கோட்டை தாண்டி அந்த பக்கம் சென்றதால் ஆண்கள் அணியினர் சண்டை போடுகின்றனர். இது எங்க வீடு எங்கள கேக்காம உள்ள வந்தாங்கன்னா அவ்வளவுதான் மரியாதை என்று அர்ணவ் கோபப்படுகிறார்.

வீடியோ இதோ