பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் திடீரென்று தள்ளி போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி முடிந்ததை தொடர்ந்து ஆறாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்த முறை 18 போட்டியாளர்களில் ஒருவராக மக்களில் ஒருவர் கலந்து கொள்ள உள்ளார். அதற்கான நேர்காணல் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனுக்காக அவர் 75 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் சில காரணங்களால் ஒரு வாரம் தள்ளி போவதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது அக்டோபர் ஒன்பதாம் தேதி இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.