நயன்தாராவின் வாடகை தாய் விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் பிக் பாஸ் ரேஷ்மா இது குறித்து பதிவு செய்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை எட்டு வருடங்கள் காதலித்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவாகி உள்ளார்.

திருமணமான நான்கு மாதத்தில் எப்படி குழந்தை பிறக்கும் என பலரும் கேள்விகளுக்கு வந்த நிலையில் வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது. நயன்தாராவின் கேரளத்து உறவினர் ஒருவர் வாடகைக்கு தாயாக இருந்து குழந்தையை பெற்றுக் கொடுத்ததும் தெரிய வந்தது.

இது தமிழ் கலாச்சாரத்திற்கு மாறானது என பலரும் நயன்தாராவுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் வலுத்து வரும் நிலையில் வனிதா விஜயகுமார் நயன்தாராவுக்கு ஆதரவாக பதிவு செய்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் ரேஷ்மா பெயர் எதுவும் குறிப்பிடாமல் பதிவு செய்துள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது. அதாவது அந்த பதிவில் இந்த உலகில் அடுத்தவர்களுக்காக யாரும் சந்தோஷப்படுவதில்லை, ஆனால் அடுத்தவர்களின் குற்றங்களை கண்டுபிடித்து அவர்களை விமர்சனம் செய்து கஷ்டப்படுத்தி சந்தோஷப்படுகின்றனர். இது எவ்வளவு பெரிய கொடூரம் என பதிவு செய்துள்ளார்.

ரேஷ்மா நயன்தாராவின் விஷயத்தை வைத்துத்தான் இந்த பதிவை பதிவு செய்துள்ளார் என பலரும் கூறி வருகின்றனர். அதே சமயம் நீ சொன்னது நூற்றுக்கு நூறு சதவீதம் சரி என வனிதா விஜயகுமார் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவர்களுடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.