பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் மதுமிதா என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் ஒன்று படு வைரலாகி வருகிறது.
Bigg Boss Madhumitha Re-Entry : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, இன்றோடு இந்த நிகழ்ச்சி தொடங்கி 69 நாட்கள் ஆகி விட்டன.
நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே தொடர் சர்ச்சைகளை சந்தித்து கொண்டு தான் இருக்கிறது. வனிதாவின் ரி-என்ட்ரி, சரவணனின் திடீர் வெளியேற்றம், மதுமிதாவின் தற்கொலை முயற்சி அது மட்டுமில்லாமல் கவினின் அம்மாவின் கைது என சர்ச்சைக்கு துளியும் பஞ்சமில்லை.
இந்நிலையில் தற்போது மதுமிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது, ஆனால் இது உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை. மதுமிதாவும் இதனை ஏற்க மாட்டார்.
ஏற்கனவே அவருக்கும் விஜய் டிவிகும் இடையே சம்பளம் குறித்த தகராறு வேறு சென்று கொண்டிருப்பதால் இது உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை, இது யாரோ ஒருவர் கிளப்பி விட்ட வதந்தி என்பது தான் உண்மை.