பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனிதா சம்பத் வீட்டில் ஏற்பட்ட பெரும் சோகம் – ரசிகர்கள் பெரும் கவலை
Bigg Boss Anitha Father Passes Away : பிக் பாஸ் வீட்டில் இருந்து அனிதா சம்பத் வெளியேறிய நிலையில் அவருடைய தந்தை ஆர் சி சம்பத் உயிரிழந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக வலம் வந்தவர் அனிதா சம்பத். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இதனையடுத்து பாஸ் வீட்டில் இருந்து அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டார். அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் அவருடைய தந்தை ஆர்சி சம்பத் உயிரிழந்துள்ளார்.
பிரபல எழுத்தாளரான இவர் பெங்களூருக்கு பயணம் செய்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிய இவரின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் அனிதா சம்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.