மக்களின் எதிர்பார்ப்பு படி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் ஜோவிகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் இடம் பெறுபவர்கள் மக்கள் இவரை வெளியேற்ற வேண்டும் என ஓட்டளிக்க கடைசியில் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் வேறொரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதே இதுவரை வாடிக்கையாக இருந்து வந்தது.
இதற்கு உதாரணமாக கடந்த இரண்டு முறை பூர்ணிமா வெளியேறுவார் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கானா பாலா, பிராவோ, அக்ஷயா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த முறை ஆரம்பத்தில் இருந்து ஜோதிகா குறைவான ஓட்டுக்களை பெற்று வந்தார். அவருக்கு அடுத்த இடத்தில் சரவண விக்ரம் இருந்து வந்தார்.
இதனால் எப்படியும் ஜோவிகா காப்பாற்றப்பட்டு சரவணன் விக்ரம் வெளியேற்றப்படுவார், கண்டன்டுக்காக டிவி சேனல் அப்படித்தான் செய்யும் என பலரும் கூறி வந்தனர். ஆனால் மக்களின் ஓட்டு படி ஜோவிகா வெளியேற்றப்பட்டு இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.