பார்த்திபனின் “இரவின் நிழல்” படத்தை பாராட்டிய இயக்குனர் பாரதிராஜா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பார்த்திபன். “இவரின் ஒத்த” செருப்பு படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகளில் ஒரே சாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் நடிகர் பார்த்திபனை மனதார பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பார்த்திபனின் இரவின் நிழல் படம் குறித்து பாராட்டியுள்ளார்.

அதில் "என் இனிய தமிழ் மக்களே" என் பாசத்துக்குரிய இரா.பார்த்திபனின் "இரவின் நிழலை அனைவரும் தியேட்டரில் சென்று பார்த்து உங்கள் பலத்த கைத்தட்டல்களில் ஆஸ்கார் விருதின் கதவுகள் திறந்து வென்று தமிழனின் சாதனை தொடர விரும்புகிறேன், வாழ்த்துகிறேன். என்று பதிவிட்டு இருக்கிறார்.