ஒரு வழியாக பாரதி கண்ணம்மா சீரியலுக்கு விஜய் டிவி சுபம் போட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதி வெண்பாவின் பேச்சை கேட்டுக் கொண்டு கண்ணம்மா மீது சந்தேகப்பட அவள் பேகை தூக்கிக் கொண்டு ரோடு ரூடாக திரிந்து பிறகு இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு தனது குழந்தைகளுக்கு பாரதி தான் அப்பா என நிரூபிக்க முயற்சி செய்தும் பாரதி அதற்கு ஒத்துழைக்கவில்லை.
இப்படியே இழுபறியாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலில் கடந்த மாதம் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து இரண்டு குழந்தைகளுக்கும் தான் அப்பா என தெரிந்து கொண்டது அடுத்து கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ அழைக்க கண்ணம்மா இனியும் உங்களுடன் வாழ முடியாது என மகள்களை கூட்டிக்கொண்டு வேறு ஒரு ஊருக்கு வந்து விட்டார். அங்கும் கண்ணம்மாவை தேடி வந்த பாரதி சண்டை ஒன்றில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பழைய நினைவுகளை இழந்து விட்டார்.
இதனால் கண்ணம்மா பாரதிக்கு மீண்டும் பழைய நினைவுகளை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறார். மேலும் இன்னும் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்திற்குள் இந்த சீரியல் முழுவதுமாக முடிவுக்கு வரவுள்ளது. இப்படியான நிலையில் சீரியல் குழுவினர் கடைசி நாள் ஷூட்டிங்கில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.