சௌந்தர்யாவிடம் அஞ்சலி வசமாக சிக்கியுள்ளார்.
Bharathi Kannamma Episode Update 27.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா வீட்டுக்கு வந்த சௌந்தர்யா அவருக்கு காபி போட்டு கொடுத்து விட்டு திருமண நாளில் வீட்டில் பூஜை ஏற்பாடுகள் செய்துள்ளதாக கூறுகிறார். மேலும் அஞ்சலியின் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவையும் அன்று நடந்த இருப்பதாக சொல்கிறார். கண்டிப்பாக நீ வரணும் பாரதியை எப்படி வரவைக்க வேண்டும் என எனக்கு தெரியும் என கூறுகிறார்.
அதன்பிறகு சௌந்தர்யா வீட்டுக்கு வந்த போது லட்சுமி வீடியோ காலில் கண்ணம்மாவிடம் உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே, உன்னை யாரோ அடிக்கற மாதிரி கனவு கண்டேன் என்று கூறுகிறார். அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன் என கண்ணம்மா கூறுகிறார்.
பிறகு அஞ்சலி குழந்தைக்கு பால் கொடுக்காமல் இருந்ததால் பால் கட்டிக்கொள்ள நெஞ்சு வலியென தவிக்க அந்த நேரத்தில் வந்த சௌந்தர்யா பால் புட்டியை பார்த்து அஞ்சலியை திட்டி விட்டு தாய் பால் கொடுக்க சொல்கிறார். பிறகு அஞ்சலியும் தவறை உணர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறார்.
இந்த பக்கம் பாரதி வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். எங்கேயாவது வெளியில் சென்று வந்தால் நன்றாக இருக்கும் என யோசிக்க அந்த நேரத்தில் டாக்டர் ஒருவர் வந்து சிம்லா செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் நீங்களும் வரீங்களா என கேட்கிறார். மேலும் அந்த டாக்டர் இன்னைக்கு வெண்பா ஜாமின் கேஸ் விசாரணைக்கு வருது, கண்டிப்பாக ஜாமின் கிடைத்து விடும் என கூறுகிறார். நீங்க வெல்கம் பண்ண போகலையா என சொல்ல பாரதி அவளை பத்தி பேசாதீங்க என கோபப்படுகிறார்.
பிறகு கண்ணம்மா வீட்டில் காய்கறி வெட்டிக் கொண்டிருக்க அவருடைய மனசாட்சி தோன்றி பாரதியுடன் சேர்ந்து வாழ போறியா? என் கேள்வி மேல் கேள்வி கேட்டு குழப்புகிறது. கண்ணம்மா என் குழந்தைகளுக்கு அவர் வேணும் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன்பிறகு வெளியான ப்ரோமோவில் லட்சுமி இனி இங்கு இருக்க முடியாது என யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே கிளம்பி விடுகிறார்.