கண்ணம்மாவை தேடி பிடித்துள்ளார் பாரதி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு இன்பா ஜெயிலில் இருக்க அவரது எதிரில் கண்ணம்மா போன்ற ஒரு உருவம் தோன்றி வெண்பாவை வெறுப்பேற்றி சிரிக்க ஒரு கட்டத்தில் வெண்பா கண்ணம்மாவை அடிப்பதாக நினைத்து ஜெயில் தன்னுடன் இருந்த பெண்ணின் கழுத்தை நெரிக்க பிறகு போலீஸ் வந்து அவர்களை பிரித்து விடுகின்றனர். அதன் பிறகு வெண்பாவை தனியாக ஒரு செல்லில் அடைகின்றனர்.
இந்த பக்கம் பாரதி ஒரு வழியாக கண்ணமாய் இருக்கும் ஊரை தேடிப்பிடித்து ஊர் எல்லையில் காத்துக் கொண்டிருக்க அப்போது கண்ணம்மா அந்த பக்கம் வர பாட்டு பாடி தான் வந்திருப்பதை தெரியப்படுத்துகிறார்.
பாடலைக் கேட்ட கண்ணம்மா நீங்க இங்கதான் இருக்கீங்கன்னு எனக்கு தெரியும் வெளிய வாங்க என சட்டம் போட பாரதி வெளியே வந்து கண்ணம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் ஊருக்கு வந்துவிடு அன்பு எல்லாரும் ஒன்றாக சேர்ந்து குடும்பமாக சந்தோஷமாக வாழலாம் என சொல்ல கண்ணம்மா அதெல்லாம் வர முடியாது நீங்க முதல்ல இங்கிருந்து கிளம்புங்க எங்களை நிம்மதியா வாழ விடுங்கள் என கூறுகிறார்.
பாரதி இனிமே உன்ன சந்தேகப்பட மாட்டேன் உன்ன தப்பா பேசமாட்டேன் என சொல்ல கண்ணம்மா எப்ப வரைக்கும் வெண்பாவோ அல்லது இன்னொரு செம்பாவோ வரவரைக்குமா? நாங்க எங்களுக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துட்டோம் என சொல்ல பாரதி கண்ணம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஊருக்கு கூப்பிட கண்ணம்மா கையை விடுங்க இல்லனா எல்லாரையும் கூப்பிடுவேன் என சொல்லி சத்தம் போட ஊர் மக்கள் எல்லோரும் வந்து பாரதியை பிடித்து பஞ்சாயத்தில் நிற்கவைக்கின்றனர்.
பிறகு பாரதி பஞ்சாயத்தில் நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்க இது என்னங்க நியாயம் நான் என் பொண்டாட்டி கைய புடிச்சு இழுத்தேன் இதில் என்ன தப்பு இருக்கு என பேசுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.