தீவிரவாதியை கொன்றதால் கண்ணம்மாவின் உயிருக்கு பெரிய ஆபத்து வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி தீவிரவாதியை குத்திக் கொண்ட நிலையில் இன்னொரு தீவிரவாதி உள்ளே வந்து இதனை பார்த்துவிட்டு அதனை மற்றவர்களிடம் சொல்ல செல்லும்போது அவனது அப்பாவின் பெயரை சொல்லி தடுத்து நிறுத்த நீ யார் என்பது எனக்கு தெரியும் என அவனைப் பற்றி சொல்ல அவன் அதிர்ச்சி அடைகிறான். பிறகு கண்ணம்மா அவனுக்கு பாடம் எடுக்க அது எல்லாம் கேட்காத அவன் தீவிரவாதிகளிடம் நம்மளுடைய சகோதரரை கொன்னுட்டாங்க என சொல்ல தீவிரவாத தலைவன் அதிர்ச்சி அடைகிறான். ஆனால் கொன்றது யாருன்னு தெரியவில்லை என சொல்லி விடுகிறார்.
இந்த பக்கம் ஷர்மிளாவும் ரோஹித்தும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது குடுகுடுப்பு காரர் ஒருவர் வீட்டுக்கு வந்து நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது வீட்டுக்கு புது வரவு வரப்போகுது என சொல்ல ரோஹித் சந்தோஷப்படுகிறான். இந்த விஷயம் கேட்டு வெண்பா அதிர்ச்சி அடைகிறாள்.
பிறகு கொல்லப்பட்ட தீவிரவாதியை பார்க்க தலைவன் கோபப்பட்டு துப்பாக்கி சுட வெடிகுண்டு சத்தம் கேட்டு சௌந்தர்யா குடும்பம் உட்பட போலீஸ் தரப்பு என அனைவரும் பதறுகின்றனர். பிறகு என்னுடைய சகோதரனை கொன்றது யாரு என தீவிரவாதி டாக்டர் ஒருவரை பிடித்து துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டி கேட்க கண்ணம்மா நான் தான் கொன்றேன் என கூறுகிறார். இதனால் கண்ணம்மாவை சுட தீவிரவாதிகள் முடிவு செய்கின்றனர். என்னை சுடுறதுக்கு முன்னாடி நான் ஏன் அவனை கொன்னேனு தெரிஞ்சிட்டு சுடு என கண்ணம்மா சொல்ல அஞ்சலி ஹேமா என எல்லோரும் தீவிரவாதியிடம் வேண்டாம் என கெஞ்சுகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.