ஆறுமாதம் சேர்ந்து எடுக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஒரே நாளில் கண்ணம்மாவின் விட்டு பிரிய நினைத்த பாரதிக்கு புதிய சோதனை வந்துள்ளது.

Bharathi Kannamma Episode Update 15.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வீட்டிற்கு வந்த சௌந்தர்யா பாரதி மற்றும் கண்ணம்மாவை சாப்பிட வைத்தார். பிறகு சௌந்தர்யா இனி அந்த கோடு போடுவதை நிறுத்த வழி இல்லையா என கேட்க பாரதி யார் என்ன சொன்னாலும் ஆறு நாள் தான் இங்கே இருப்பேன் என கூறுகிறார். கோர்ட்ல கேட்டா என்ன சொல்றது என கேட்க ஆறுமாதம் இருந்தேன்னு சொல்லுங்க என கூறுகிறார். என்ன பொய் சொல்ல சொல்றியா என கேட்க நான் உங்க மகன் மா என சொல்கிறார்.

ஆமா நீ என் மகன்தான் கெட்டது பண்ற மகன், மனைவியை பாதியிலேயே துரத்தி விட்ட மகன், நீதிமன்ற உத்தரவை மதிக்காத மகன் என அடுக்கிக் கொண்டு செல்கிறார். என்னால எல்லாம் பொய் சொல்ல முடியாது ஒருவேளை நீ 6 நாள்ல கிளம்பி வந்தேனா நானே கண்ணம்மாவுக்கு வக்கீலா மாறுவேன். கோர்ட்டுல வாதாடுவேன் என கூறுகிறார். பிறகு அவர்கள் வீட்டிற்கு கிளம்பியதும் பாரதி யார் என்ன சொன்னாலும் 6 நாள்தான் அதுக்கப்புறம் இருக்க மாட்டேன் என கூறுகிறார்.

கொஞ்ச நேரத்தில் அறந்தாங்கி நிஷா கண்ணம்மா வீட்டிற்கு வருகிறார். தான் புதிதாக கட்டிய வீட்டிற்க்கு குடி வந்திருப்பதாகவும் காபி தூள் வேண்டும் எனவும் கேட்கிறார். பிறகு நான் ஒரு வக்கீல் வாய்தா வாங்கிக் கொடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட் என சொல்கிறார். உங்க ரெண்டு பேரு இந்த கோட்டுல பார்த்திருக்கேன் பாரதி கண்ணம்மா தான நீங்க என கூறுகிறார். அந்த ஜட்ஜ் அம்மா கூட எனக்கு ரொம்ப நல்லா தெரியும். ரெண்டு பேரும் உங்கள் கேஸ் பத்தி பேசி இருப்போம் என கூறுகிறார். ஆறு மாசம் இங்க சேர்ந்து வாழணும் அது தானே உத்தரவு 6 நாள் சேர்ந்து வாழ்ந்து விட்டு அதுக்கு அப்புறம் கூட ஏமாற்றலாம் நினைச்சா நான் விடமாட்டேன். இங்க நடக்கிற எல்லா விஷயத்தையும் ஜட்ஜ் அம்மாவுக்கு சொல்லுவேன் என கூறுகிறார். பாரதி இதெல்லாம் உன் வேலையா கண்ணம்மாவிடம் சண்டையிட எல்லாத்துக்கும் என சந்தேகப்பட்ட எப்படி எனக்கும் அவங்கள இன்னைக்கு தான் தெரியும் என கூறுகிறார். எனக்குன்னு வந்து சேருரீங்க பாரு என தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்று விடுகிறார்.

அதன்பிறகு பாரதி ஹாஸ்பிடலுக்கு கண்ணம்மா செல்கிறார். கண்ணம்மாவை பார்த்த பாரதி அது நேற்றுப் போல் நினைப்பு என நினைத்துக்கொண்டு சந்தன வாசனையை காட்டி என்னை மயக்கி நினைக்கிறியா எனக்கு நிறைய வேலை இருக்கு, நேத்து எல்லாம் என்னை தொந்தரவு பண்ணாதே போதும் என சொல்கிறார். பிறகு கண்ணம்மா நிஜம் தான் என சொல்கிறார். உங்களுக்கு ஒரு நாள் முழுக்க என் நினைப்பெல்லாம் வருதா? அப்போ உங்க மனசுல அந்த அளவுக்கு நான் நிறைஞ்சி இருக்கேன் என கூறுகிறார்.

எதுக்கு வந்த எனக் கேட்க தலைவலியா இருக்கு என கூறுகிறார். வேற ஏதாவது டாக்டர்கிட்ட போய் பார்க்க வேண்டியதுதானே என்கிட்டே எதுக்கு வந்த எனக் கேட்கிறார். தெரிஞ்ச டாக்டர் கிட்ட தான் வருவாங்க எனக்கு தெரிஞ்ச ஒரே டாக்டர் நீங்க தான் அதனால தான் வந்தேன் என கூறுகிறார். உனக்கெல்லாம் இங்க ட்ரீட்மென்ட் பார்க்க முடியாது எனக் கூறுகிறார்.

ஏன் முடியாது நான் இப்போ பேஷன்ட் பணம் கட்ட தானே போறேன் என கூறுகிறார். பிறகு பாரதி முடியவே முடியாது என சொல்ல கண்ணம்மா நிஷாவை உள்ளே வர வைக்கிறார். உள்ளே வந்தேன் நிஷா சட்டம் இது அது என்ன பேச ஒரு கட்டத்தில் பாரதி பார்த்து தொலைகிறேன் என சொல்லிவிட்டு கண்ணம்மாவை பரிசோதனை செய்துவிட்டு மாத்திரையை எழுதிக் கொள்கிறார். மேலும் இதற்கு 1500 ரூபாய் ஃபீஸ் போடுகிறார். ஆமா விலைவாசி எல்லாம் ஏறிடுச்சு என கூறுகிறார். உடனே கண்ணம்மா ஒரு பேப்பர் பேனாவை வாங்கி வீட்டில் சாப்பிட்டதற்கு கணக்குப்பட்டு 1545 ரூபாய் ஆச்சு, நீங்கதான் இப்ப எனக்கு 45 ரூபாய் தரணும் அடுத்த முறை வரும்போது கொடுங்க என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.