ஹேமாவை சமாதானம் செய்ய கண்ணம்மா ஒரு விஷயம் செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வரும் கண்ணம்மா ஹேமா இங்கே என்ன லட்சுமி இடம் கேட்க அவள் கோபமாக இருக்கிறாள் என ஸ்கூலில் நடந்த விஷயத்தை சொல்ல சரி வா நான் பேசுறேன் என லட்சுமி அழைத்துக்கொண்டு ரூமுக்கு சென்று ஹேமாவிடம் பேச ஹேமா கண்டுகொள்ளாமல் இருக்கிறாள்.

பிறகு உங்க ரெண்டு பேருக்கும் ஒரு போட்டி வைக்கிறேன் நான் ஒன் டூ த்ரீ எண்ணும் போது யாரு முதல்ல என்னை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்குறாங்களோ அவங்களுக்கு தான் அம்மா மேல பாசம் அதிகம் என சொல்லி ஒன் டூ த்ரீ என சொல்ல இருவரும் ஒரே நேரத்தில் கட்டியணைத்து முத்தமிடுகின்றனர். பிறகு ஹேமாவை சமாதானம் செய்து லட்சுமியிடம் பேச வைக்கிறார் கண்ணம்மா.

அடுத்து மூவரும் ஒன்றாக அமர்ந்து கீரை கிள்ளி கொண்டிருக்க அப்போது சௌந்தர்யா வீட்டுக்கு வந்து கண்ணம்மாவை தனியாக அழைத்துச் சென்று தீபாவளி கொண்டாட வீட்டுக்கு வர சொல்லி கேட்க கண்ணம்மா நான் இப்ப ஒத்துக்கிட்டாலும் பசங்க அங்க வர மனநிலையில் இல்லை என சொல்லி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். பிறகு சௌந்தர்யா பணம் கொடுக்க கண்ணம்மா வேண்டாம் என கூறி விடுகிறார். நீங்களும் இங்க வாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து தீபாவளி கொண்டாடலாம். எல்லோருக்கும் ஒரு மாற்றமாகவும் இருக்கும் மனநிலையும் கொஞ்சம் மாறும் என சொல்ல சௌந்தர்யா சந்தோஷமாகி எல்லோரும் நாளைக்கு வரோம் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

பிறகு கண்ணம்மா ஹேமா, லட்சுமி என மூவரும் சென்று தீபாவளிக்கு துணி எடுத்து மகிழ்கின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.