![IMG_20221012_164940](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/10/IMG_20221012_164940-696x417.jpg)
ரோஹித்தை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வெண்பாவால் பார்வதி குடும்பத்திற்கு அதிர்ச்சி விஷயம் தெரிய வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ரோஹித் வெண்பா வீட்டுக்கு வந்து கதவை தட்ட கதவை திறக்கும் ஷர்மிளா நான் உன்னை எவ்வளவு நம்பினேன் ஆனால் நீ என்ன ஏமாத்திட்ட, நீ ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவனை சொல்லி இருந்தா கூட என் பொண்ணு உனக்கு கட்டி வச்சிருப்பேன் ஆனா நீ எவ்வளவு பொய் சொல்லி என்னை ஏமாற்றி இருக்க இனிமே என் முகத்திலேயே முழிக்காத என பிடித்து வெளியே தள்ளுகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/10/IMG_20221012_165108.jpg)
பிறகு கண்ணம்மாவும் லட்சுமியும் கொண்டிருக்கும் போது குடுகுடுப்பைக்காரர் நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பொறக்குது என கண்ணம்மாவிற்கு நல்ல வாக்கு சொல்கிறார். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேர போவதாக சொல்லி அரிசி தானம் செய்ய கேட்க கண்ணம்மா அரிசி எடுத்துக் கொண்டு சென்று கொடுக்கிறார். நான் சொன்னது அத்தனையும் கண்டிப்பாக நடக்கும் என வாக்கு கொடுக்கிறார்.
மறுநாள் பாரதியின் அப்பா வேணு காரில் வெளியே சென்று இருக்கும்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விட அப்போது அந்த வழியாக வெண்பா வந்து இதை பார்க்க அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து பாரதிக்கு தெரியப்படுத்துகிறார். பாரதி வீட்டில் விஷயத்தில் சொல்ல அனைவரும் பதறியடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர்.
மைல்ட் ஹார்ட் அட்டாக் தான் பயப்பட வேண்டிய விஷயம் இல்லை என டாக்டர் சொன்னதைக் கேட்டு நிம்மதி அடைகின்றனர். வெண்பா தான் அவரை சரியான நேரத்திற்கு கொண்டு வந்து சேர்த்ததாக டாக்டர் சொல்ல பாரதி நன்றி கூறுகிறார். சௌந்தர்யா தேம்பி தேம்பி அழ கண்ணம்மா அவரை ஆறுதல் படுத்துகிறார். நிறைய பேருக்கு கெட்டது நினைக்கிறவங்களே நல்லா இருக்கும்போது நமக்கு ஒன்னும் ஆகாது என கண்ணம்மா சொல்ல வெண்பா தன்னைத்தான் சொல்கிறார் என்பதை புரிந்து கொள்கிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/10/IMG_20221012_165004.jpg)
உடனே வெண்பா நான் தான் அந்த நேரத்தில் சரியாக வந்து அங்கிளை காப்பாற்றினேன். இல்லையென்றால் அவருடைய நிலைமை என்ன ஆயிருக்கும் இந்நேரம் ஏதாவது கெட்டது நடந்திருக்கும் என சொல்ல சௌந்தர்யா திட்டுகிறார். பிறகு எல்லோரும் சென்று வேணுவை பார்க்க அவர் மயக்கத்தில் இருக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.