![IMG_20221010_090641](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/10/IMG_20221010_090641-696x457.jpg)
DNA டெஸ்ட் விஷயத்தில் பாரதி முக்கிய முடிவு எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வெண்பா வீட்டில் ரோஹித் செய்த விஷயங்களை நினைத்துக் கொண்டிருக்க சாந்தி எல்லா விஷயத்தையும் சர்மிளா அம்மா கிட்ட போட்டு கொடுத்துடுங்க என சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் சரியாக ஷர்மிளா வருகிறார். பிறகு கொஞ்ச நேரத்தில் ரோஹித் வீட்டுக்கு வந்து தன்னுடைய நண்பனும் நானும் பிஸ்னஸ் ஒன்றை செய்து கொண்டிருந்தோம் அதில் கொஞ்சம் நஷ்டம் ஆயிடுச்சு.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/10/IMG_20221010_090714.jpg)
அதை நினைச்சுக்கிட்டே போகும்போது தான் அவனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு இப்போ மூன்று லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுது என்ன பண்றதுன்னு தெரியல என ரோஹித் சொல்ல ஷர்மிளா அந்த பணத்தை கொடுக்கிறார். பணத்தை வாங்கிய ரோஹித் நன்றி சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
இந்தப் பக்கம் பாரதி ஹாஸ்பிடல் ஒன்றிற்கு வந்து டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என சொல்ல தாராளமாக எடுக்கலாம் என கூறுகின்றனர். உங்கள பத்தி ஆல்ரெடி டாக்டர் சொன்னாரு பேசன்ட் யாரு என கேட்க எனக்கு தான் எடுக்கணும் என பாரதி கூறுகிறார். ஆனா இந்த விஷயம் கான்ஃபிடன்ஸ்சியலா இருக்கணும் என பாரதி சொல்கிறார்.
எனக்கும் லட்சுமி மற்றும் ஹேமா என இரண்டு பத்து வயசு குழந்தைகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கணும் என சொல்ல உங்களுக்கு இப்ப பிளட் சாம்பிள் எடுத்ததெல்லாம் குழந்தைகளை எப்ப கூப்பிட்டு வரீங்க என கேட்க அவங்கள கூட்டிட்டு வர முடியாது நானே ப்ளட் கலெக்ட் பண்ணி கொண்டு வந்து கொடுக்கிறேன் என பாரதி வாக்கு கொடுக்கிறார். சரி நீங்க கொண்டு வந்து கொடுங்க டெஸ்ட் பண்ணி ஒரு வாரத்துல ரிசல்ட் கொடுத்துடலாம் என சொல்கின்றனர்.
பிறகு பாரதி டிஎன்ஏ மேட்ச் ஆகிடுச்சுன்னா நான் கண்ணம்மா கிட்ட காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அவளோடு சேர்ந்து வாழ தயாராக இருக்கிறேன் அதுவே மேட்ச் ஆகல அப்படின்னா இதுக்கெல்லாம் கண்ணம்மா பதில் சொல்லியே ஆகணும். நான் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் வெண்பா கழுத்துல தாலி கட்டுவேன் என முடிவெடுக்கிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/10/IMG_20221010_090748.jpg)
இந்த பக்கம் பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது தன்னுடைய அம்மாவிடம் பணத்தை கொடுத்து விட்டு பசிக்குது என சொல்ல பக்கத்து வீட்டு பெண்மணி சாப்பாடு போட்டு வந்து கொடுக்க அந்த நேரத்தில் வெண்பா வந்து அங்கு நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு ஷர்மிளாவும் இருப்பதை பார்த்து ரோஹித் அதிர்ச்சியடைய ஷர்மிளா எல்லாரையும் எவ்வளவு ஏமாற்றி இருக்க என பளார் பளார் என அறைந்து அங்கிருந்து கிளம்பி விடுகிறார். வெண்பா ஆடிய ஆட்டம் என்ன எல்லாம் முடிவுக்கு வந்துடுச்சு என ரோகித்திடம் நக்கலாக பேசிவிட்டு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.