பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு வெண்பா புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன் அப்போது வரும் ரோஹித் பத்திரிக்கை தயாராகி விட்டதாக எடுத்துக்காட்ட சர்மிளா சூப்பர் என சொல்லிக் கொண்டிருக்க அப்போது ரோஹித்துக்கு ஒரு போன் வருகிறது. ரோகித் பேசிக் கொண்டிருப்பதை சாந்தி ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பிறகு ரோகித் கிளம்பி செல்ல வெண்பாவும் சாந்தியும் அவனை பாலோ பண்ணி செல்ல ரோஹித் அம்மாவை சந்தித்து பேச அவர் கடங்காரங்கள் வீட்டை பூட்டி என்ன வெளியே தள்ளிட்டாங்க என அழுவ இதை பார்த்த வெண்பா இதுதான் ரோகித்தின் உண்மையான முகம் என்பதை புரிந்து கொண்டு அதை வீடியோவாக எடுக்கிறார்.

அதன் பிறகு பாரதி மருத்துவமனையில் இருக்க அவருடைய மனசாட்சி எதிரே தோன்றி கண்ணம்மா கேட்ட கேள்வில என்ன தப்பு இருக்கு? நீயும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தா எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும் இல்ல என சொல்ல நான் எதுக்கு எடுக்கணும் நான் ஏற்கனவே ரெண்டு டெஸ்ட் எடுத்துட்டுடேன். கண்ணம்மா மேல நான் சந்தேகப்படல அவ தப்பு பண்ணி இருக்கான்னு உறுதியா நம்புறேன் என சொல்ல அவருடைய மனசாட்சி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தா உண்மையான முடிவு தெரிஞ்சிடும் அது பிறகு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நீ போய் சந்தோஷமா வெண்பா கழுத்துல தாலியை கட்டு.

ஒருவேளை லட்சுமி உனக்கு பிறந்த குழந்தை உறுதியாயிடுச்சுன்னா நீ செஞ்ச தப்புக்காக கண்ணம்மா கிட்ட வருத்தம் தெரிவிச்சு அவளோட சேர்ந்து வாழு என சொல்ல ஒரு கட்டத்தில் பாரதி டி என் ஏ டெஸ்ட் எடுக்கிறேன். அந்த முடிவை வைத்து அடுத்த முடிவு எடுக்கிறேன் என பாரதி சொல்ல மனசாட்சி மறைகிறது.

பிறகு கண்ணம்மா பாரதி ரூமுக்குள் வந்து அவங்களுக்கு டி என் ஏ டெஸ்ட் எடுக்க ஏற்பாடு பண்ணியாச்சு நீங்க எப்ப எடுக்க போறீங்க என கேட்க பாரதி பதில் சொல்ல முடியாமல் எழுந்து வெளியே சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.