ரோஹித்துடன் கல்யாணம் நடந்து முடிய கடைசியில் பெரிய செக் வைத்துள்ளார் ஷர்மிளா.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ரோஹித் மாலை போட போக தடுத்து நிறுத்தும் வெண்பா எனக்கு உன்னை பிடிக்கலை என சொல்ல பண்றது எல்லாம் பண்ணிட்டு இனி இன்னும் என்ன பண்ண போற என ஷர்மிளா வெண்பாவை அதட்டி கல்யாணத்தை நடத்தி வைக்கிறார்.
அடுத்து இந்த பக்கம் கண்ணம்மா வீட்டில் எல்லோரும் அமர்ந்து பாரதி செய்த விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க கண்ணம்மா பாரதி ஒரு படிச்ச முட்டாள். அவர கோபக்காரனா, முன்கோபியா பார்த்திருக்கேன் ஆனா முதல்முறையா ஒரு முழு முட்டாளாக பார்க்கிறேன் என கூறுகிறார்.
கீழே லட்சுமியிடம் ஹேமா அழுது புலம்பி நான் ஒரு அனாதை என கூறுகிறார். இதனால் வருத்தப்படும் லட்சுமி ஹேமாவிடம் உண்மையை சொல்லிவிடலாம் நினைத்து நீ அனாதை கிடையாது உனக்கு அப்பா என தொடங்க சௌந்தர்யா வந்து தடுத்து நிறுத்துகிறார். இருந்தாலும் ஹேமா லட்சுமி ஏதோ சொல்ல வந்தா அது என்ன என கேட்க சௌந்தர்யா உன் மேல அன்பு செலுத்த தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி ஹேமா சமையல் அம்மா என எல்லோரும் இருக்காங்க நீ எதுக்காகவும் கவலைப்பட கூடாது அதைத்தான் சொல்ல வந்திருப்பா என சொல்ல லட்சுமி ஆமாம் என சொல்லி சமாளித்து விடுகிறாள்.
அடுத்து வீட்டுக்கு வரும் ரோஹித் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக உள்ளே வர பிறகு ஷர்மிளா தன்னுடைய சொத்தில் பெரும்பாலான பகுதியையும் கம்பெனியில் 60% ரோஹித்தின் பெயருக்கு எழுதி வைத்திருப்பதாக சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார். அது மட்டுமல்லாமல் அவருடன் வாழ மாட்டேன் என வெண்பா விவாகரத்து வாங்கினால் 100 சதவீத சொத்து மற்றும் சேர் என அனைத்தும் ரோஹித்தை தான் சென்றடையும் எனக்கு பத்திரத்தில் குறிப்பிட்டு இருப்பதாக கூறி அனைத்து டாக்குமெண்டையும் கொடுக்க வெண்பா அதிர்ச்சியில் மூழ்குகிறாள். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.