கண்ணம்மா மேல தப்பு இல்லையே என பாரதி யோசிக்கும் அளவிற்கு அவரது மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Bharathi Kannamma Episode Update 01.12.2022 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் மாவு அரைத்துக் கொண்டிருக்கும் கண்ணம்மா அந்த நேரத்தில் வந்த பாரதியிடம் டீ கொடுத்து விட்டீர்களா என கேட்க அவர் குடித்து விட்டேன் என கூறுகிறார். அதன்பிறகு அவருக்கு போன் கால் வர போனில் பேச சென்று விடும் நேரத்தில் வாய்தா வடிவுகரசி உள்ளே வருகிறார். அவர் வந்ததும் கண்ணம்மா என்ன நீங்க பெரிய வக்கீல் சொன்னீங்க ஆனா கோர்ட்டுக்கு போக மாட்றீங்க என கேட்கிறார். வாய்தா வடிவுகரசி எதை எதையோ சொல்லி சமாளித்து கொள்கிறார்.

பிறகு அவர் மாவில் பல்லி விழுந்து இருப்பதை பார்த்துவிட்டு அதை அதிர்ச்சியோடு கண்ணம்மாவிடம் கூறுகிறார். அதன்பிறகு இந்த மாவை கீழே கொட்டி விட வேண்டியதுதான் என கண்ணன் சொல்ல வாய்தா வடிவுகரசி ஒரு தட்டை வைத்து பல்லி இருக்க மாவையும் மட்டும் எடுத்துப் போட்டுவிட்டு இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறுகிறார். ஆனால் கண்ணம்மா என்னுடைய மாவு நல்லாவும் தரமாகவும் இருக்கும் என்று நம்பித்தான் எல்லாரும் வாங்குறாங்க. இதை சாப்பிட்டு யாருக்காவது ஏதாவது ஆனா என்னால தாங்கிக்க முடியாது. நிறைய குழந்தைங்க என்னோட மாவை சாப்பிடறாங்க அதனால இத விற்க மாட்டேன் என கூறுகிறார். இதையெல்லாம் பாரதி ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதனால உனக்கு நஷ்டம் வராதா என வாய்தா வடிவுகரசி கேட்க தொழில்ல ஒரு நாள் ஞாபகம் வரும் ஒரு நாள் நஷ்டம் வரும் அதுக்காக இந்த மாதிரி தப்பு செய்யக்கூடாது என கூறுகிறார். பாரதி வெண்பா வந்தபோது நீயும் கண்ணம்மாவும் நம்பிக்கை துரோகிகள் என சொன்னதை நினைத்து பார்த்தேன் ஒரு வேளை கண்ணம்மா நல்லவ தானா என யோசிக்கிறார்.

இந்த பக்கம் சௌந்தர்யாவின் கணவர் சௌந்தர்யாவிடம் வெண்பா ஜாமினில் வெளியே வந்தது பற்றி சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார். வெளியே வந்த அவர் சும்மா இருக்கமாட்டார் பாரதியும் கண்ணம்மாவும் பிடிக்க கண்டிப்பா ஏதாச்சும் வேலை செய்வா என கூறுகிறார். ஆனா இப்போ பாரதி ஒன்னும் வெண்பா கூட அட்டாச்மென்ட்டா இருக்கிற மாதிரி தெரியல. நீ ஒன்னும் பயப்படாத என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். அதுக்கப்புறம் முடிவு பண்ணலாம் என கூறுகிறார்.

அதன் பிறகு வீட்டில் நடக்க உள்ள பூஜைக்காக அனைவருக்கும் ட்ரெஸ் எடுக்கவேண்டும் பாரதி கையால் கண்ணம்மாவுக்கு துணி எடுத்துக் கொடுக்க வேண்டும் என சௌந்தர்யா சொல்ல இது ரொம்ப பேராசை என்று அவருடைய கணவர் கூறுகிறார். அதெல்லாம் நடக்கும் என சொல்லிவிட்டு இருவரும் பாரதியின் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கு பாரதியை கடைக்கு அழைக்கின்றனர். முதலில் ஃப்ரீயாக இருப்பதாக சொன்ன பாரதி கடைக்கு வா என அழைத்ததும் எனக்கு வேலை இருக்கு என்று ஜகா வாங்குகிறார். சௌந்தர்யா ஒருவழியாக அவரை கடைக்கு அழைத்து வருகிறார். பாரதியின் அப்பா ஒரு முக்கியமான வேலை காரணமாக வெளியே சென்றுவிடுகிறார். இதனால் பாரதியின் சௌந்தர்யாவும் காரில் வர பாரதி நான் ஒரு வடைக்கு ஆசைப்பட்டு கொண்டு கொள்ள மாட்டின எலி மாதிரி ஆகிவிட்டேன் என புலம்புகிறார்.

அதன்பிறகு கண்டிப்பா நீங்க ஏதாவது பாம் வச்சி இருப்பீங்க, அதனாலதான் என்னை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போறீங்க. இதனால் சும்மா சொல்லல இதுவரைக்கும் நடந்த அனுபவத்தில் சொல்கிறேன் என கூறுகிறார். அவர் சொன்ன மாதிரி அங்கே கண்ணம்மா வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த பாரதி நான் வரவில்லை என மேலும் இவை எதுக்கு இங்க வந்து இருக்கா இதுக்கும் இவளுக்கு என்ன சம்பந்தம் என கேட்கிறார். சௌந்தர்யா அஞ்சலியை யாரோ கடத்தி இருக்கும்போது அவளை காப்பாத்தினது கண்ணம்மா தான். ஹேமாவை யாரோ கடத்தி அப்போ அவளையும் காப்பாத்தினது கண்ணம்மா தான். இதற்கெல்லாம் கண்ணம்மா வேண்டும் ஆனால் வீட்டில் நடக்கும் பூஜைக்கு கண்ணம்மா வேண்டாமா என கூற பாரதி திருதிருவென முழித்தார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.