கண்ணம்மா கேட்ட கேள்விகளால் தீர்வாதிகள் முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் சௌந்தர்யா வீட்டில் உள்ளே நான்கு பேர் மாட்டிக் கொண்டிருப்பதால் கதறியழ இந்த பக்கம் ஹாஸ்பிடலில் கண்ணம்மா எழுந்து நின்று தீவிரவாதிகளிடம் சில கேள்விகளை கேட்கிறார்.

உங்களுடைய கோரிக்கைகளை கவர்மெண்ட் ஏற்று கட்டும் ஏற்றுக்கொள்ளாமல் போகட்டும் அதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை ஆனால் இது ஹாஸ்பிடல் நிறைய பேஷன்ட் இருக்காங்க அவங்கள பத்திரமா பாத்துக்க வேண்டியது எங்களது கடமை. மிக மத்திய அமைச்சரும் அட்மிட்டாகி இருக்காரு. அவருடைய உடல்நிலை எங்களுக்கு மட்டுமில்லை உங்களுக்கும் ரொம்ப முக்கியம். அவர வச்சு தானே கவர்மெண்ட் கிட்ட பேலன்ஸ் பேசிட்டு இருக்கீங்க அப்போ அவர் நல்லபடியா இருக்கணும் தானே என கண்ணம்மா சொல்ல தீவிரவாதிகளும் பேஷண்ட்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்களை அனுப்பி வைக்கின்றனர்.

இந்த பக்கம் சௌந்தர்யா அழுது கொண்டிருக்கிற திடீரென வேணும் இரும்பல் வந்துவிட அவர் அங்கிருந்து தண்ணீர் குடிக்க செல்வதாக எழுந்து சென்று விடுகிறார். இந்த பக்கம் மருத்துவமனையில் திடீரென மத்திய அமைச்சருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க தீவிரவாதிகள் டாக்டர்களை அனுப்பி வைக்கின்றனர்.

இன்னொரு பக்கம் ரோஹித்துடன் தப்பு நடந்ததால் சாப்பிடாமல் அழுது புலம்பி கொண்டிருக்கும் வெண்பா தீவிரவாதிகளின் பிடியில் கண்ணம்மா மாட்டிக் கொண்டிருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டு உற்சாகமாக சாப்பிடுகிறார்.

இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.