பாரதியால் சௌந்தர்யா முடிவு ஒன்றை எடுக்க வெண்பாவுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த கண்ணம்மா வேலைக்கு போன வருத்தத்தை தன்னுடைய அம்மாவிடம் சொல்லி அழுது கொண்டிருக்க கண்ணம்மாவின் அக்கா சாந்தி ஆறுதல் சொல்கிறாள்.
அடுத்து அங்கு வரும் அகிலன் இப்படி கோட்டை வீட்டிற்கு வந்து நிற்கிற உன்னால ஒரு ஷேர் கிடைக்கும் அதை வைத்து எனக்கு தேவையானதை பண்ணிக்கொள்ளலாம் என்று நினைத்து இப்பொழுது ஒன்றும் இல்லாமல் பண்ணிட்ட என திட்டச் சொல்ல அதன் பிறகு வரும் சண்முக வாத்தியார் கண்ணம்மாவை கண்டபடி திட்டுகிறார். மறுபக்கம் வெண்பா தன்னுடைய அம்மா ஷர்மிளாவிடம் நடந்த விஷயங்களை சொல்லி சந்தோஷப்படுகிறார்.
இந்த பக்கம் பாரதி மொட்டை மாடியில் இருக்கு அப்போது அந்த வழியாக வர கனவா பத்தி கேட்க கண்ணம்மா தன்னுடைய அம்மாவின் உடல் நலனுக்காக 13 நாட்கள் விரதம் இருக்கிறாள் அந்த விரதத்தில் மயக்கம் வந்து அப்படி தூங்கி இருப்பாள் என சொல்ல பாரதி அம்மாவிடம் நான் பேசிப் பார்க்கிறேன் என சொல்கிறார்.
அதன் பிறகு சௌந்தர்யாவும் அவரது அண்ணனும் பேசிக் கொண்டிருக்க அங்கு வரும் பாரதி உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என சொல்கிறார். பிறகு கண்ணம்மாவிற்கு திருந்த வேலை போட்டு தரணும் என சொல்லி கண்ணம்மா விரதம் இருக்கும் விஷயத்தையும் ஹாஸ்டல் அப்ரூவலுக்காக அதிகாரி கேட்ட கேள்விகளுக்கு டக்கு டக்குனு பதில் சொன்ன விஷயத்தை சொல்கிறார். மேலும் கண்ணம்மாவுக்கு திரும்பவும் வேலை போட்டு கொடுத்தால் கம்பெனி பொறுப்புகளை நான் கவனித்துக் கொள்கிறேன் என சொல்ல சௌந்தர்யா மனம் மாறுகிறார்.
உடனே அங்கு வரும் ஷர்மிளா அப்படி உடனே திரும்பவும் வேலை கொடுத்துட்டா செஞ்ச தப்புக்கு தண்டனை என்ன இருக்கு என சொல்ல சௌந்தர்யா ஷர்மிளாவை அமைதியாக கண்ணம்மாவுக்கு வேலை போட்டு கொடுக்கிறார். உடனே இந்த விஷயத்தை மது கண்ணம்மாவுக்கு போன் போட்டு சொல்ல கண்ணம்மா சந்தோஷப்படுகிறார்.
இந்த விஷயம் அறிந்து சாந்தி, அகில் என எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு பாக்யா சண்முக வாத்தியாரிடம் கண்ணம்மாவுக்கு திரும்பவும் வேலை கிடைச்சிருச்சு நீங்க ஏதாவது பேசி சௌந்தர்யா மேடம் கோவத்துக்கு ஆளாகிவிடாதீர்கள் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் பாரதி ஷர்மிளாவிடம் நான் என்னைக்காவது வெண்பாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னனா? என்னுடைய வாழ்க்கைக்கு அவர் என்னைக்குமே சரியானவ கிடையாது என பாரதி ஷாக் கொடுக்கிறார்.