நடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கொரானா உறுதி செய்யப்பட்டிருப்பதாக சாந்தனு தெரிவித்துள்ளார்.
Bhagyaraj Tested COVID19 Possitive : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகரும் பாக்கியராஜின் மகனான சாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய பெற்றோர் பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா ஆகியோருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்.
தயவுசெய்து கடந்த 10 நாட்களில் எங்களோடு தொடர்பில் இருந்தவர்கள் எங்களை சந்தித்தவர்கள் கொரானா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.