வணங்கான் படத்தில் பாலா சில மாற்றங்களை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாக்கி வரும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
சூர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்து வருவதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் பாலா திருவண்ணாமலை சென்று 10 நாட்கள் அங்கு இருந்து படத்தில் சில திருத்தங்களை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது மும்பையில் இருக்கும் சூர்யா சென்னை திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் பாலா சூர்யா கூட்டணியை எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் இந்த படத்தின் சூட்டிங் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.