
கோபியின் முகத்தில் கரியை பூச ஈஸ்வரி வாயடைத்து நிற்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்யாவை விட்டு விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி தொடர்ந்து பாக்யா வைக்கும் பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் வீட்டை தன்னுடைய அப்பாவின் பெயருக்கோ அம்மாவின் பெயருக்கோ எழுதிக் கொடுக்க ஊரில் இருக்கும் அப்பாவின் சொத்து மொத்தத்தையும் கொடுத்தது போக மேலும் 20 லட்சம் பணம் வேண்டும் என கேட்க பாக்கியா அந்த பணத்தை நான் தருகிறேன் என்று சவால் விட்டார்.
பாக்கியா ஆறு மாசம் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் தற்போது தொடர்ந்து எட்டு திருமணத்திற்கு சமைத்து இரண்டு லட்சம் ரூபாய்க்கான செக்கை கோபியிடம் கொடுக்க மொத்த குடும்பமும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியோடு நிற்கிறது.

கோபியும் பாக்யா கொடுத்த செக்கால் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.