நிலா பாப்பா காணாமல் போக குடும்பத்தினர் எல்லோருக்கும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் இனியா நிலா பாப்பாவுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்க நிலா தண்ணீர் கேட்பேன் அதை எடுப்பதற்காக இனியா உள்ளே வந்த நேரத்தில் நிலா பாப்பா வெளியே ஓடி விடுகிறார்.

நிலா காணாமல் போன விஷயம் தெரிந்து வீட்டில் உள்ள எல்லோரும் அதிர்ச்சி அடைந்து வெளியே தேட செல்லும் போது அப்போது திடீரென நடிகர் சித்தார்த்துடன் நிலா பாப்பா வீட்டிற்கு வருகிறது. நிலாவை பார்த்ததில் அமிர்தா கண்ணீருடன் கட்டியணைத்துக் கொள்ள சித்தார்த் அந்த குழந்தைக்கு ஒன்னும் இல்லையே அழாதீங்க என ஆறுதல் கூறுகிறார்.

பிறகு பாக்கியா சித்தார்த்தை வீட்டிற்குள் அழைத்து வந்து அவரது குடும்பம் பற்றி விசாரிக்க சித்தா பட ப்ரமோஷன் பற்றி பேசுகிறார். அதன் பிறகு இனியா காலேஜ் கிளம்பியதும் பாக்கியா ஈஸ்வரியிடம் இனி நான் காலேஜ் போறதா இல்லை என்று சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ராமமூர்த்தி, அமிர்தா ஆகியோர் சமாதானம் செய்ய முயற்சி செய்தும் பாக்யா தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். இதைத் தொடர்ந்து எழில் பாக்கியாவை ஒரு ரெஸ்டாரன்ட்க்கு கூட்டிச் சென்று பழனிச்சாமியையும் அங்கு வரவைத்து பழனிசாமி மூலம் பாக்கியாவின் மனதை மாற்ற முயற்சி செய்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

மொத்தமாக கதை ஏதும் இல்லாமல் சித்தா பட பிரமோஷன், இது அது என காட்சிகளை நகர்த்தி உருட்டி உள்ளார் இயக்குனர் என பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.