கோபிக்காக பாக்யா எடுத்த முடிவால் கோபத்தை கொட்டியுள்ளார் ராதிகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வேலை தேடி அலையும் கோபியை பாக்யா புதிதாக ஆரம்பிக்கும் ரெஸ்டாரண்டில் மேனேஜர் வேலைக்கு கூப்பிட கோபி உன்கிட்ட பத்துல ஒரு ஆளா நான் வேலை செய்யணுமா அந்த அளவுக்கு நான் இன்னும் அதள பாதாளத்துக்கு போயிடல என்று கோபப்பட்டு செல்ல ராதிகா அவருடைய இந்த நிலைமை இல்ல இப்படி குத்தி காட்டாதீங்க, அவர பாத்துக்க அவருடைய மனைவியை நான் இருக்கேன்.
அவருடைய நிலை இப்படியே இருக்காது, உங்களுடைய courtesy எங்களுக்கு தேவையில்லை என்று கோபத்தை கொட்டி உள்ளே செல்ல கோபி பாக்கியா பேசியதை நினைத்து வருத்தப்பட்டு இருக்க ராதிகா வந்து இப்ப உங்களுக்கு சந்தோஷமா நீங்களும் அவமானப்பட்டு என்னையும் அவமானப்பட வச்சிட்டீங்க என்று கோபப்படுகிறார்.
பிறகு கோபி ராதிகா பக்கத்தில் உட்கார்ந்து ஆபீஸை க்ளோஸ் பண்ணும்போது எவ்வளவு வருத்தமா இருந்துச்சு தெரியுமா அத யார்கிட்டயும் சொல்ல முடியாம உள்ளுக்குள்ளேயே போட்டு மறைச்சு தினம் தினம் நரக வேதனையை அனுபவிச்சிட்டு இருந்தேன் என்று கூறுகிறார்.
கண்டிப்பா சீக்கிரம் ஒரு நல்ல வேலைக்கு போய் மீண்டும் பழையபடி ஒரு புது பிசினஸ் தொடங்கி இதைவிட பெருசா ஜெயிச்சு காட்டுவேன் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. எனக்கு வேலையில்லனாலும் உன்னை இதுவரைக்கும் எப்படி பாத்துக்கிட்டேனோ அதே மாதிரி சந்தோஷமா பார்த்துப்பேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டு ராதிகா அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கு ஆனா நீங்க என் மேல் அந்த நம்பிக்கை வைக்கல என்று கூறுகிறார்.
கிரெடிட் கார்டு பிரச்சனை வந்திருக்கும் போதே என்கிட்ட சொல்லி இருக்கலாம் அப்படியும் இல்லையா ஆபீஸ்ல பிரச்சனை பெருசாகும் போது சொல்லி இருக்கலாம் இல்ல க்ளோஸ் பண்ண முடிவெடுத்த பிறகாவது சொல்லி இருக்கலாம் என்று ராதிகா சொல்ல கோபி இனிமேல் ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் அது உன்கிட்ட மறைக்க மாட்டேன் இது கடவுள் மேல சத்தியம் என்று சத்தியம் செய்து கொடுக்கிறார்.
அடுத்ததாக ஈஸ்வரி நைட்டு தூங்காமல் அழுது கொண்டிருக்க ராமமூர்த்தி நம்மால் முடிந்தது ஏதாவது செய்வோம் என்று ஆறுதல் கூறுகிறார். மறுநாள் காலையில் பாக்யா இவர்களுக்கு காபி கொண்டு வந்து கொடுத்து டல்லாக இருப்பதை பார்த்து ரூமுக்கு சென்று ஈஸ்வரி தனக்கு கொடுத்த நகைகளை எடுத்து வந்து கொடுத்து உங்க பையனுக்கும் எனக்கு எதுவுமே இல்லை ஆனாலும் அவர் கஷ்டப்படனும்னு நான் என்னைக்கும் நினைச்சது கிடையாது, இந்த நகையை வைத்துக் கொள்ளுங்கள் அவருக்கு உங்களால் முடிந்ததை செய்ய இது கண்டிப்பா உதவியா இருக்கும் என்று கொடுக்க ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் அதை வேண்டாம் என மறுத்தும் பாக்யா நீங்க வருத்தமா இருக்கிறது பார்க்க எனக்கு பிடிக்கல என்று கூறுகிறார்.
மறுபக்கம் கோபி வருத்தமாக இருக்க இனியா வந்து ஆறுதல் சொல்கிறார். அடுத்து செழியன் வந்து நீங்க ஜாக்கிங் போகலையா இன்னைக்கு கண்டிப்பா ஜாக்கிங் போகணும் என்று சொல்லி அழைத்துக் கொண்டு செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.