கோபி புதிய பிசினஸ் தொடங்க முடிவெடுக்க பாக்யாவின் ஹோட்டல் காத்து வாங்குகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா சின்ன சின்ன வேலை செய்யப்போன செல்வி திட்டி நீ எந்த வேலையையும் செய்யாத என கோபப்படுகிறார்.
அதன் பிறகு ஈஸ்வரியும் இனியாவும் பேசிக் கொண்டிருக்க கோபி கீழே இறங்கி வர ராதிகா மயூவை பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது கோபி ராதிகாவிடம் பேச ராதிகா எதையும் பேசாமல் மேலே சென்று விட இனியா நேத்து நைட்டு அவங்க ரெண்டு பேருக்கும் சண்டை என்று சொல்கிறார்.
அதன் பிறகு ராதிகா கீழே இறங்கி வரும்போது ஈஸ்வரி அவனிடம் எதுக்கு சண்டை போட்டுட்டு இருக்க அவனே உடம்பு முடியாதவன் என்று சொல்ல நான் மட்டும்தான் சண்டை போடுறனா என்று கேட்க ஈஸ்வரி வேற யாரு சண்டை போடறாங்க என்று கேள்வி எழுப்ப நீங்கதான். நீங்க மாமாவோட சண்டை போடாமலா இருக்கீங்க? எப்ப பார்த்தாலும் எதையாச்சு திட்டிட்டு தானே இருக்கீங்க என்று பதிலடி கொடுக்கிறார்.
மேலும் உங்க புள்ள கிட்ட ஒன்னு நான் சும்மா சும்மா சண்டை போடல அவர் அவ்வளவு பொய் சொல்றாரு என்று கோபப்படுகிறார். நல்லா வளர்த்து வச்சிருக்கீங்க என்று ஈஸ்வரியை கேள்வி கேட்க அவர் கடுப்பாகிறார். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அவரை நான் மாத்துறேன் என்று மேலே செல்கிறார்.
அடுத்ததாக பாக்கியாவின் புதிய ஹோட்டலில் சாப்பிட ஆள் இல்லாமல் காத்து வாங்க சமைத்ததெல்லாம் அப்படியே இருக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் பாக்கியம் புதுசுல அப்படித்தான் இருக்கும் போக போக எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுகிறார்.
அடுத்து வீட்டுக்கு வரும் அவர் ஈஸ்வரி ராமமூர்த்தியை சாப்பிட கூப்பிட அவர்கள் இப்பதான் மாத்திரை போட்டோம் அப்புறம் சாப்பிடலாம் என்று சொல்கின்றனர். செழியன் சாப்பிடாமல் காத்திருக்க அவருக்கு ஆறுதல் சொல்லி கூட்டி வந்து சாப்பிட வைக்கிறார்.
மறுபக்கம் கோபி ராதிகாவுடன் கிளவுட் கிச்சன் டிசைன் தொடங்கப் போவதாக சொல்ல அவர் உங்களுக்கான பணத்தை நான் கொடுக்கிறேன் என சொல்கிறார். இரவு ஆனதும் கிச்சனில் பாக்கியா எனக்கு தாசி ஊத்திக் கொண்டிருக்க அமிர்தா இனியாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க கோபி அம்மா அப்பாவிடம் கிளவ்டு கிச்சன் தொடங்க போவதாக சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.