பாக்கியாவிடம் கோபி பற்றிய விஷயத்தை கூறியுள்ளார் ராதிகா.
Baakiyalakshmi Serial Episode Update 13.12.21 : தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபி வீட்டை விட்டு வெளியே அனுப்பிய பிறகு மய்யூ தனக்கே கிரையான்ஸ் வேண்டும் என கேட்கிறார். இரவு நேரத்தில் எப்படி வெளியே போவது நாளைக்கு வாங்கி தருகிறேன் என ராதிகா சொல்கிறார். ஆனால் மய்யூ எனக்கு இப்பவே வேண்டும் நாளைக்கு நான் இந்த ட்ராயிங்க ஸ்கூல்ல கொடுக்கணும் என கூறுகிறார்.
நான் கோபி அங்கிள்க்கு போன் பண்ணி சொல்றேன் அவர் வாங்கிட்டு வருவார் என மய்யூ சொல்ல ராதிகா அதெல்லாம் நீ யாருக்கும் போன் பண்ண தேவையில்லை என கூறுகிறார். ராதிகாவின் அம்மா இனி நீ கோபி அங்கிள் கிட்ட பேசவும் கூடாது அவரை பத்தி இங்க பேசவும் கூடாது. இனிமே அவர் இங்க வர மாட்டார் என கூறுகிறார்.
ஏன் வர மாட்டாரு அவர் நல்ல அங்கிள் தானே என மயூ கேட்க அதற்கு அவரது பாட்டி அவர் நல்லவர் இல்லை அவர் பத்தி இந்த வீட்டில பேசக்கூடாது என கூறுகிறார். உடனே மய்யூ ராதிகாவிடம் நீங்கதானே அவர் நல்லவர் அவர் கிட்ட பேச சொன்னீங்க. எனக்கு ஆரம்பத்துல அவரை பிடிக்காது தானே. அவர இந்த வீட்டுக்கு வரவேண்டாம் என்று தானே சொன்னேன். நீங்கதானே என்னை அவர்கிட்ட பேசு என்ன போர்ஸ் பண்ணீங்க, இப்போ பேச கூடாதுன்னு சொல்றீங்க. ஏன் மாத்தி மாத்தி பேசுறீங்க. எனக்கு க்ரையான்ஸ் வேணாம் ஒன்னும் வேணாம் என கோபப்பட்டு விட்டு உள்ளே செல்கிறார். உன்னால மய்யூவுக்கு எவ்வளவு கஷ்டம் பாரு என ராதிகாவின் அம்மா கூறிவிட்டு உள்ளே செல்கிறார்.
இந்தப் பக்கம் கோபி பார்க்கில் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்க அங்கு சென்ற பாக்கியா உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா? பணக் கஷ்டத்துல இருக்கீங்களா என கேட்கிறார். கோபி அதெல்லாம் இல்ல நீ கவலைப்படாத என சொல்கிறார். இல்ல நீங்க எந்த பிரச்சனையாக இருந்தாலும் வீட்ல குழந்தைகள் கிட்ட உன் அப்பா அம்மா கிட்ட நல்லா பேசவீங்க, ஆனா இப்போ மூணு நாளா சரியா பேசுறதில்லை என கூறுகிறார். அப்போ எனக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் உங்க கிட்ட பேசுறதை நிறுத்தக் கூடாது என கோபி சொல்ல பாக்கியா நான் அப்படி சொல்ல வரல எங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா நீங்க பாத்துட்டீங்க. உங்களுக்கு ஒரு பிரச்சனைனா அதை நாங்களும் பார்க்கணும்ல என கூறுகிறார்.
உங்களுக்காக நான் ஏதாச்சும் செய்யனுமா? சொல்லுங்க நான் உங்களுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன் என கூறுகிறார். அதெல்லாம் ஒன்னும் இல்ல வீட்ல தான் ஏதாவது பேசிட்டே இருப்பேன் இப்போ வாக்கிங் போற இடத்திலேயும் வந்து டார்ச்சர் பண்ணாத. எனக்காக என்ன வேணாலும் பண்ணுவேன் சொன்னல ஒன்னே ஒன்னு பண்ணு என கோபி கூற என்னன்னு பாக்கியா கேட்கிறார். பேசாமல் வந்த வழியே வீட்டுக்குப் போ அது போதும் என கூறுகிறார்.
இந்த பக்கம் கோபியின் அப்பா மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்க அப்போது அவருக்கு காப்பி எடுத்துக் கொண்டு செல்கிறார் எழில். பிறகு எழில் தன்னுடைய தாத்தாவிடம் உங்களுக்கும் அப்பாவுக்கும் ஏதாவது பிரச்சனையா என கேட்கிறார். இல்ல அவ கிட்ட நீங்க பேசறது இல்ல, அவர பார்த்தா முறைக்காதீங்க அவர் உங்களைப் பார்த்தால் உள்ளே எழுந்து போய்டுறாரு அதான் கேட்டேன் என கேட்கிறார்.
அவனுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை இருக்கப் போது? அவன் அடிக்கடி லேட்டா வருவது தான் எனக்கு பிடிக்கல. பாக்கியாவை மட்டம் தட்டிக்கிட்டு இருக்கான். அவன் பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடிவு செய்த போது அவ மேல எனக்கு ரொம்ப கோபம் வந்தது. அதையெல்லாம் சேர்த்து வச்சி இப்போ காட்டிக்கிட்டு இருக்கேன். இல்லனா அவன் ஆகியவை தூக்கி சாப்பிட்டு போய் விடுவான் என கூறுகிறார்.
அப்பாவுக்கு சொத்து தரமாட்டேன்னு எங்க எல்லாருக்கும் ஏன் தாத்தா எழுதி வச்சீங்க என எழில் கேட்க அவன் எப்ப பாத்தாலும் லாஸ்னு சொல்லிட்டு இருக்கான். அவன் பெயரில் எழுதி வச்ச இந்த சொத்துல கையை வைத்து விடுவான். அதனாலதான் அவன் பெயரில் எழுதல என கூறுகிறார். வேற ஒன்னும் இல்லையே தாத்தா என கேட்க அதெல்லம் ஒன்னும் இல்லை என கூறுகிறார்.
அதன்பிறகு எழில் ஆபீசில் அமர்ந்து கொண்டிருக்க அமிர்தா வருகிறார். எழில் சம்பந்தப்பட்ட பொருட்களைக் கொடுத்து விட்டு உங்க பொருள் எதுவும் என்னிடம் இருக்கக்கூடாது என்றுதான் வந்தேன். இனிமே எங்க வீட்டு பக்கம் வந்துடாதீங்க. என்னை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்காதிங்க என கூறுகிறார். ஏங்க இப்படி சொல்றீங்க அவ்வளவுதான் எல்லாம்? எல்லாம் முடிஞ்சு போச்சா எனக் கேட்க எதுவும் தொடங்கவே இல்லை என அமிர்தா கூறிவிட்டு சென்றுவிடுகிறார். இதனால் எழில் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்.
இந்தப் பக்கம் ராதிகா வீட்டுக்கு போன பாக்கியா ராதிகா டல்லாக இருப்பதை பார்த்து என்ன ஏது என கேட்கிறார். அப்போது ராதிகா கோபியை பற்றி சொல்கிறார். ஆனால் அவருடைய பெயரில் சொல்லாமல் என்னுடைய நண்பர். சின்ன வயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும். ராஜேஷ் விஷயத்துல நான் ரொம்ப பாதிக்கப்பட்டு இருந்த போது அவர் எனக்கு ஆறுதலாக இருந்தார். எனக்கு தெரிந்து தெரியாமலோ அவர் மீது காதல் வந்துவிட்டது. என்னையும் குழந்தையையும் அவர் நன்றாக தான் பார்த்துக் கொண்டார். ஆனால் இப்போ அவருடைய அப்பா வந்து என் அம்மாவிடம் தப்பு தப்பா பேசி விட்டு சென்றிருக்கிறார்கள். அவரும் என்னை ஏமாற்றி விட்டார் என கூறுகிறார்.
உடனே பாக்கியா ராஜேஷ் விஷயத்திலும் சரி இவருடைய விஷயத்திலும் சரி உங்க மேல எந்த தப்பும் இல்ல. அப்படி இருக்கும் போது நீங்க எதுக்கு வருத்தப்படணும். இனிமே யாரையும் நம்பாதீங்க. நல்லா யோசிச்சு பேசுங்க. மயூ குழந்தைதானே கொஞ்ச நாள்ல மறந்துவிடுவார் என கூறுகிறார். பிறகு வீட்டில் எழில் அமிர்தா சொல்லி விட்டுச் சென்றதை நினைத்து தூங்காமல் இருக்க அந்த நேரத்தில் வந்த பாக்கியா எழில் சோகமாக இருப்பதை பார்த்து ஏதாவது பிரச்சினையா என கேட்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என கூறுகிறார் எழில். உடனே பாக்கியா யாரையாச்சும் லவ் பண்றியா என கேட்கிறார். எழில் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.