பாக்யாவுக்கு அட்வான்ஸ் செக் கொடுத்துள்ளார் ராஜசேகர்.
Baakiyalakshmi Serial Episode Update 27.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஆயிரம் பேருக்கு சமைக்க ஆர்டர் எடுத்துள்ள பாக்கியாவுக்கு ராஜசேகர் அட்வான்ஸ் செக் கொடுத்து அனுப்புகிறார்.
ராகு, கேது மற்றும் சனி தோஷம் விலக வேண்டுமா? இதோ எளிய பரிகாரம்.
வீட்டிற்கு வந்த பாக்கியா செக்கை கோபியிடம் காட்ட அவர் மோசமாக திட்டி தீர்க்கிறார். உன்னால கண்டிப்பா செய்ய முடியாது. இதனால எந்த பிரச்சனை வந்தாலும் அதை நீ மட்டும்தான் சமாளிக்கணும். உனக்கு துணையாக யாரும் இருக்க மாட்டோம் என அவரை திட்டி விடுகிறார்.
கோபியும் அவருடைய அம்மாவும் மோசமாக திட்டியதால் மனமுடைந்து அழுகிறார் பாக்கியா. என்னால செய்ய முடியும்னு நம்பிக்கை இருந்தா நீ செய்யுமா மாமாவோட சப்போர்ட் உனக்கு இருக்கும் என கூறுகிறார் அவருடைய மாமனார். எழில் பாக்யாவுக்கு ஆறுதல் கூறுகிறார்.
மறுநாள் காலையில் பார்க்கில் ஒரு சிலரை சந்தித்து வீட்டிற்கு வருமாறு கூறுகிறார் பாக்கியா. பின்னர் அனைவரையும் வீட்டில் ஒன்று சேர்த்து சமையல் ஆர்டர் குறித்து பேசுகிறார். முதலில் பலரும் தயங்குகின்றனர். சொந்தக் காசு போட்டு மளிகைப் பொருட்களையும் சாமான்களையும் வாடகைக்கு எடுத்து சமைக்க முடியாது என கூறுகின்றனர்.
Seafarer Ashwin Surprise His Wife Deepa Vani | Flash Mob | First Time In Chennai
இதனையடுத்து பாக்கியா மளிகை பொருட்கள் மற்றும் சமைக்கத் தேவையான சாமான்களை வாடகைக்கு எடுத்து தருவதாக வாக்குக் கொடுக்கிறார். இந்த நேரத்தில் கோபி வந்து கோபத்தை காட்டுகிறார். பின்னர் பாக்கியா யாரெல்லாம் சமைக்கிறார்கள் எனக் கேட்க சிலர் என்னால் முடியாது என அங்கிருந்து கிளம்ப தொடங்கி விடுகின்றனர். இதனால் பாக்கியாவின் முகம் சுருங்கத் தொடங்குகிறது. இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.