செய்த சத்தியத்தை மீறி ராதிகா வீட்டிற்குச் சென்று நடுரோட்டில் கண்கலங்கி அழுதுள்ளார் கோபி.

Baakiyalakshmi Serial Episode Update 15.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. அப்பாவுக்கு செய்த சத்தியத்தை மீறி ராதிகா வீட்டிற்கு சென்ற கோபி அவரது வீட்டு கேட்டை திறக்க முயற்சிக்கும்போது ராதிகாவின் அம்மா தயவுசெய்து இதோடு இந்த வீட்டுக்கு வராதீங்க எனக் கூறியதை நினைத்து மீண்டும் காரில் வந்து அமர்ந்து கண்கலங்கி அழுகிறார்.

அதன் பிறகு வீட்டில் பிள்ளைகள் அனைவரும் கேரம்போட் விளையாடிக்கொண்டிருக்க கோபி ஏதோ ஒரு சிந்தனையில் இங்கும் அங்கும் அங்குமாக நடந்து கொண்டிருக்கிறார். இதனை கவனித்த செடியும் அப்பா என்ன ஆச்சு என கேட்கிறார். ஆனால் கோபி அதெல்லாம் ஒன்றும் இல்லை நீ விளையாடு என கூறி விடுகிறார். பிறகு வந்த பாக்கியா எல்லோரையும் நேரம் ஆச்சு போய் தூங்குங்க என சொல்லிவிட்டு கோபியிடம் என்ன ஆச்சு என கேட்கிறார். ஒன்னும் இல்ல பைத்தியம் கொஞ்சம் டயர்டா இருக்கு அதுதான் வேற ஒன்னும் இல்ல என சொல்லி சமாளித்து விடுகிறார்.

அதன்பிறகு மறுநாள் காலையில் கோபி வெளியே கூட எழுந்து வராமல் ரூமுக்குள் எழுந்து அமர்ந்து யோசனையில் இருக்கிறார். பாக்கியா என்னாச்சு என மேலே செல்ல அப்போது ஈஸ்வரி பாட்டு கோபி சாப்பிட்டானா ஏன் இன்னும் கீழே கூட வரல ஆபீஸ் பாலையா என கேட்கிறார். தெரியல அத்தை அதுதான் போய் கேட்க போறேன் என சொல்லிவிட்டு மேலே செல்கிறார்.

பிறகு பாக்கியா மேலே சென்று என்னாச்சு என கேட்கிறார். ஆபீஸ் போகலையா என கேட்க கோபி போகனும் கொஞ்சம் லேட்டா போகிறேன் என கூறுகிறார். பிறகு அவரைத் தொட்டுப் பார்த்து காய்ச்சல் ஏதாவது இருக்கா என பார்க்கிறார் பாக்கியா. கொஞ்சம் மூட் அவுட்டா இருக்கு அதுதான் கோபி சொல்கிறார். பிறகு பாக்கியா கீழே இறங்கி வந்து அவருக்கு பிடித்த பூரி உருளைக்கிழங்கு மசாலா தோசை ஆகியவற்றை செய்கிறார். அதை எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்து நீங்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் நீங்கள் சாப்பிட்டால் தான் நான் கீழே போவேன் என அங்கேயே நின்று கோபியை சாப்பிட வைக்கிறார்.

அதன் பின்னர் கோபி ஹாலில் இங்குமங்கும் நடந்து கொண்டு பிறகு சோபாவில் படுக்கிறார். பிறகு அந்த நேரத்தில் அங்கு வந்த ஈஸ்வரி பாட்டு கோபியிடம் என்ன ஆச்சு உடம்பு ஏதும் சரியில்லையா என்று கேட்கிறார். ரெண்டு நாளாவே நீ சந்தோஷமா இல்ல என்ன ஆச்சு என கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்வளவுதான் என கூறுகிறார். பிறகு பாக்கியாவை கூப்பிட அவ எங்க இருக்கா அவர் வெளியே போய் இருக்கா என கூறுகிறார். அம்மா கிட்ட இருந்து ஏதாச்சும் மறைக்கிறியா என கேட்க அதெல்லம் ஒன்னும் இல்ல மா என சொல்லிவிட்டு ரூமிற்கு சென்று விடுகிறார்.

அதன்பிறகு எழில் மற்றும் பாக்கியா அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது எழில் எப்பம்மா புது வீட்டுக்கு சமைக்கப் போறே எனக் கேட்கிறார். பதினெட்டாம் தேதி நல்ல நாள் அன்னைக்கு தான் பால் காய்ச்சலாமா இருக்கேன் என கூறுகிறார். பிறகு எழில் நாம கிராண்டா செய்யலாம். நடிகர்கள் யாரையாவது வரவைத்து ஓபன் பண்ணலாம் என கூறுகிறார். அப்போதான் இன்னும் பிரபலமாக்கும் நிறைய ஆர்டர் வரும் நீ நிறைய பேரை வேலைக்கு வைத்து பிசினஸ் செய்யலாம் என சொல்கிறார். அதன்பிறகு பாக்கிய ஆகும் செல்வியும் இதைப் பற்றி பேசும் போது செல்வியும் எழில் தம்பி சொல்வது தான் சரி என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.