ராதிகா வீட்டை விட்டு கோபி தொடரப்பட்ட நிலையில் அவருக்கு அவருடைய அப்பா எதிர்பாராத செக் வைத்துள்ளார்.

Baakiyalakshmi Serial Episode Update 11.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ராதிகா வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட கோபி கடும் கோபத்துடன் வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்து அவர் அப்பாவை பார்த்து முறைத்துக் கொண்டு நிற்க அதன்பிறகு ஈஸ்வரி உட்கார் கோபி என இரண்டு மூன்று முறை சொல்கிறார். கோபியின் அப்பா ஜாலியாக விசில் அடித்துக் கொண்டு கோபியை மேலும் வெறுப்பு ஏற்றுகிறார். ஒரு கட்டத்தில் கோபி கடுப்பாகி எழுந்து மேலே சென்று விடுகிறார்.

அதன் பிறகு அவனே ஆபீஸிலிருந்து பிரச்சனையோடு வந்து இருக்கான் நீங்க விசில் அடித்துவிட்டு இருக்கீங்க என ஈஸ்வரி அவருடைய கணவரை திட்ட உன் பிள்ளைக்கு என்னைக்கு தான் பிரச்சனை இல்ல. அதுக்காக நான் விசிட் அடிக்காமல் இருக்க முடியுமா போடி என சொல்கிறார். இருவரும் எலியும் பூனையுமாக இருப்பதை பார்த்த பாக்கியா இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எழில் வருகிறார். பிறகு எழிலுக்கு தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கவிதா போன் செய்து உங்கள் விளம்பரம் நன்றாக இருந்தது என பாராட்டுகிறார்.

அதன் பிறகு பாக்கியா எழிலிடம் உனக்கும் உங்க தாத்தாவுக்கும் ஏதோ பிரச்சனை இருக்கு. ரெண்டு பேரும் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை. தப்பா தாத்தா மேல பயங்கர கோபத்தில் இருக்காரு என சொல்கிறார். எழில் அவர் உயில் எழுதி வைத்ததனால அப்பா மேல கோபமா இருப்பாரு நீ எதுவும் போட்டு மனச குழப்பிக்காத. அப்படியே ரெண்டு பேருக்கு இடையில ஏதாவது பிரச்சனை இருந்தால் உன்கிட்ட வந்து கண்டிப்பா சொல்லுவாங்க என சொல்கிறார்.

இதனையடுத்து கோபியின் அப்பா மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபியும் மேலே வந்து அவருடைய அப்பாவிடம் சண்டை போடுகிறார். நீங்க பண்றது அசிங்கமா இல்லையா அப்பா? எதுக்கு ராதிகா வீட்டுக்கு போனீங்க. அவளுக்கு இருக்கிற பிரச்சினை போதாதா என கேட்கிறார். எனக்கு என் குடும்ப சந்தோஷம் தான் முக்கியம். அதுல யார் குறுக்க வந்தாலும் நான் சும்மா இருக்க மாட்டேன் என கூறுகிறார். நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்ன இதையெல்லாம் நிறுத்திக்க உன் வேலையை பாருனு, ஆனா நீதான் எதையும் நிறுத்திகல.

அதனாலதான் அந்த வீட்டுக்கு போனேன். ராதிகாவை பார்த்து உன்னை பத்தி எல்லா விஷயத்தையும் சொல்ல தான் போனேன். ஆனா அந்த பொண்ணு இல்ல. அவ மட்டும் இருந்திருந்தா நீதான் பாக்கியா புருஷன்னு உண்மையை போட்டு உடைத்து இருப்பேன். இப்பவும் சொல்றேன் இதோட நிறுத்திக்க இல்லனா விடு எடுத்துக்கொள்ள அவங்க வீட்டு வாசல்ல இருப்பேன். ராதிகா கிட்ட நீதான் பாக்கியாவோட புருஷன்னு உண்மைய சொல்லுவேன். வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லுவேன் என கூறுகிறார். போய் சொல்லுங்க எல்லாரும் நாசமா போகட்டும் என கோபி சத்தம் போடுகிறார். எல்லாரும் இல்லை நீயும் தான் நாசமா போவ, எல்லா உண்மையும் தெரிந்த பிறகு ராதிகா கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு வா. இந்தப் பக்கம் உன் புள்ளைங்க முகத்தைப் பார்க்கக் கூட கூச்சப்படுவார்கள். யாரும் இல்லாம நீ நடுத்தெருவில் தான் நிக்கணும் என கூறுகிறார்.

நான் எதுக்கு நடுத்தெருவுல நிக்கணும் இது என் வீடு என கோபி சொல்கிறார். ராதிகாவும் இல்லாம உண்மை தெரிந்த பிறகு இந்த வீட்டிலே யாரும் உன்னோடு இல்லாம நீ மட்டும் அனாதையாக கிடக்கணும். என் மருமகள், பேரப் பசங்க, உங்க அம்மா அதான் என் பொண்டாட்டி எல்லாரையும் என்னால பாத்துக்க முடியும். இன்னும் 10 வருஷத்துக்கு உயிரோட இருப்பேன். என் பேத்தி கல்யாணம் வரைக்கும் இருப்பேன். அதுவரைக்கும் நான் பார்த்துப்பேன் என கூறுகிறார். போய் சொல்லட்டுமா என கேட்கிறார்.

இனிமே ராதிகா வீட்டுக்கு போக மாட்டேன் அவளை பார்க்க மாட்டேன் என்று எனக்கு சத்தியம் பண்ணி கொடு. உன் புள்ளைங்க என் மேல சத்தியம் பண்ணு, உங்க அம்மா மேல சத்தியம் பண்ணு. இப்ப மட்டும் நீ சத்தியம் பண்ணு இல்ல ரெண்டு பேர் கிட்டயும் உண்மையா சொல்லிடுவேன் என மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் கோபியும் சத்தியம் செய்கிறார். எனக்குத் தெரியாமல் நீ ஏதாவது வேலை செஞ்சா நான் சும்மா இருக்க மாட்டேன் என சத்தம் போட்டுவிட்டு அவர் கீழே இறங்குகிறார். கோபி அதிர்ச்சியில் இருக்க இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.