ராதிகா வீட்டுக்குப் போய் சத்தம் போட்டு பேசியுள்ளார் கோபியின் அப்பா.
Baakiyalakshmi Serial Episode Update 10.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபியின் ராதிகாவும் ஒன்றாக காரில் சுற்றுவதை பார்த்த கோபியின் அப்பா நேராக ராதிகா வீட்டிற்கு செல்கிறார். ராதிகா இல்லையா எனக் கேட்க ராதிகா இல்ல நீங்க யாரு என்ன அவருடைய அம்மா கேட்கிறார். இங்கே அடிக்கடி வந்துட்டுப் போறான் கோபி அவருடைய அப்பா என சொல்ல ராதிகாவின் அம்மா அதிர்ச்சி அடைகிறார். வாங்க உட்காருங்க என சொல்ல நான் இங்கே சாவகாசமாக உக்காந்து பேசிட்டு போக வரல, கல்யாணமாகி பொண்டாட்டி தோளுக்கு மேல் வளர்ந்த மூணு பசங்க இருக்கிற என் புள்ளையோட உங்க பொண்ணுக்கு என்ன பேச்சு? அவங்க என்ன அர்த்தத்தில் பேசுறாங்கன்னு எனக்கு தெரியல. இது நல்லா இல்ல.
நான் என் புள்ளைய எவ்வளவோ முறை கண்டித்தும் அவன் திரும்பத் திரும்ப இங்க தான் வரான். உங்க பொண்ணு என் புள்ளையோட பேசுறத இதோடு நிறுத்திக் சொல்லுங்க. இன்னொரு முறை அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்தால் நடக்கிறதே வேற என கூறுகிறார். நானும் இதுபத்தி அவர் கிட்ட சொல்லிட்டு தான் இருக்கே அவர் கேட்க மாட்டார் என ராதிகாவின் அம்மா சொல்ல இன்னொரு முறை வந்து வெளியே போடா ன்னு சொல்லுங்க, ராதிகா இருப்பா அதுல நாலு வார்த்தை நாக்கு புடுங்குற மாதிரி கேட்கலாம்னு தான் வந்தேன் ஆனா அவ இல்ல, என்னை இன்னொரு முறை இந்த வீட்டு வாசப்படி ஏற வைத்து விடாதீர்கள். நல்லா இருக்காது என கூறுகிறார்.
அவர் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் ராதிகாவும் கோபியும் வீட்டிற்கு வருகின்றனர். ராதிகாவின் அம்மா கடும் கோபத்தில் இருப்பதால் ராதிகா என்னாச்சும்மா லேட் ஆனதால் கோபமா என கேட்கிறார். நான் உன்கிட்ட இவருடைய பழகாதனு படிச்சு படிச்சு சொன்ன கேட்டியா. இவரோட அப்பா இங்க வந்தாரு. கல்யாணமான என் பையனோட உங்க பொண்ணுக்கு என்ன வேலைன்னு என்ன நாக்கு புடுங்குற மாதிரி கேட்டார். உங்க பொண்ணு கிட்ட சொல்லி வையுங்கள் இன்னொரு முறை என் பையனோட பேசுறத பாத்தா நான் சும்மா இருக்க மாட்டேன். நடக்கறதே வேற என சொல்லிட்டு போனார். அடுத்து என்ன பண்ணுவாரு குடும்பத்தோட வந்து உங்க கிட்ட சண்டை போடுவாரு இல்ல நான் உன்மேல போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுப்பாரு. கொஞ்சமாச்சும் நான் சொல்றத கேட்டியா. உன்ன அவரு அப்படி திட்டிட்டு போனாரு. அதற்கெல்லாம் கோபி மன்னிப்பு கேட்க என் பொண்ண உங்ககிட்ட வந்து வந்து பேசினா? அவ பேசுலனாலும் ஏன் பேசலனு நீங்க தானே வந்து பேசுறீங்க, நீங்கதானே இந்த வீட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருக்கீங்க. கல்யாணமான ஆம்பளையா மயக்கி போடுற அளவுக்கு என் பொண்ணு ஒண்ணும் கேடு கெட்டவ இல்ல. தயவு செஞ்சு என் பொண்ணையும் பேத்தியையும் விட்டுடுங்க. இனிமே இந்த வீட்டு பக்கம் வராதீங்க வெளியே போங்க என கூறுகிறார்.
ராதிகா பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து இருக்கிறார். வேறு வழி இல்லாமல் கோபி வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அப்பா வந்து பேசியதால் அவர் மீது கடும் கோபத்தில் அங்கிருந்து வீட்டுக்கு கிளம்புகிறார். இந்தப் பக்கம் பாக்கியா ஜெனியிடம் டவுட் கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் உள்ளே நுழைகிறார் கோபியின் அப்பா. குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுமா என கேட்க பாக்கியா கொண்டு வந்து கொடுக்கிறார். பிறகு என்னாச்சு ஏதாச்சு எனக் கேட்க ரொம்ப நாளா என் மனசு பட்டு ஒரு விஷயம் படித்துவிட்டு இருந்தது அதற்கு ஒரு முடிவு கட்டிட்டு வந்து இருக்கேன் என கூறுகிறார். என்ன விஷயம் அது என ஈஸ்வரி கேட்க உனக்கு அது தெரியாத வரைக்கும் நிம்மதியென சொல்கிறார்.
ராதிகா வீட்டிலிருந்து கோபி கடும் கோபத்தில் வர அந்த நேரத்தில் அவருடைய அப்பா இனியாவிடம் அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். கோபி வீட்டின் வெளியே வந்து நின்று அப்பாவை முறைக்க இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.