இனியா அனுப்பிய போட்டோவால் பதறிப்போன கோபி கடைசி எழிலிடம் மாட்டியுள்ளார்.

Baakiyalakshmi Episode Update 26.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் ஒரு இன் பார் ஆளுக்கு ஒரு பக்கமாக இருந்து வரும் நிலையில் கோபி யாருடைய கண்ணிலும் சிக்காமல் இருந்து வருகிறார்.

இன்னொரு பக்கம் செழியன், ஜெனி ஒருவழியாக சமாதானம் ஆகி விடுகின்றனர். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது இனியா ஓடி வந்து அம்மா வீலர் ஜெயின்ல ரைடு போக ஓகே சொல்லிட்டாங்க வாங்க போகலாம் என அழைத்துச் சென்று ரைடு செல்கிறார். அதில் இருந்து கீழே இறங்கிய இனியா எழிலிடம் அப்பாவை பார்த்த மாதிரியே இருக்கு என்று கூறுகிறார். அப்பா எதுக்கு இங்க வரப்போறாரு என எழில் கூறுகிறார்.

அதன் பிறகு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது டல்லாக இருந்த இனியா அப்பாவை மிஸ் செய்வதாக கூறி கோபிக்கு மெசேஜ் செய்கிறார். பிறகு எழிலுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை அனுப்புகிறார். இந்த பக்கம் ரெஸ்டாரன்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கோபியிடம் மயூ உங்களை அங்கிள் எனச் சொல்வதால் ஸ்கூலில் எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள் என சொல்ல என்னை டாடி எனக்கு கூப்பிடு என சொல்கிறார். மகிழ்வும் ஓகே என டாடி என குறிப்பிடுகிறார்.

இந்த நேரத்தில் இனியா அனுப்பிய மெசேஜ், போட்டோவை பார்த்து விட்டு இதே இடம் போல இருக்கிறதே இவங்களுக்கு போக வேற இடமே இல்லையா என அதிர்ச்சி அடைகிறார். சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே போனதும் நீங்க அவ்வளவு தானா என மயூரா கேட்க ஆமாம் உங்க அவ்வளவுதான் பக்கத்தில் ஒரு புது தீம் பார்க் திறந்து இருக்காங்க அங்க போகலாமா என கேட்கிறார். மயூவும் கொஞ்ச நேரம் யோசித்து வட்டு ஓகே என சொல்கிறார்.

இதனால் பெருமூச்சு விட்ட கோபி அவர்களை காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பும் முயலும் நேரத்தில் எழில் கோபியை பார்த்துவிடுகிறார். ஓடிச் சென்று அவருடைய அப்பாவை தடுத்து நிறுத்துவதற்கு காரில் கிளம்பி விடுகிறார் கோபி. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.