சத்தம் போட்ட இனியாவால் வீட்டில் பிரச்சனை வெடித்துள்ளது.

Baakiyalakshmi Episode Update 25.02.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இனியாவை அறைந்த பாக்கியா அவ உனக்கு அண்ணி அவளுக்கு உன்னை கேள்வி கேட்க எல்லா உரிமையும் இருக்கு. மரியாதையா பேசுற கத்துக்கோ என கிட்ட இப்போ உங்களுக்கு சந்தோஷமா என் இனியா ஜெனியிடம் சத்தம் போட்டுவிட்டு மீது செல்கிறார். ஆன்ட்டி நான் எதுவும் தப்பா சொல்லவே இல்லை என ஜெனி சொல்ல நீ எதுவும் தப்பா சொல்லி இருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். நானும் இனியா செய்றது எதுவும் கவனிக்காமலில்லை. அதனாலதான் நான் வெளியே போகும்போது அவளுக்கு கொஞ்சம் பார்த்துக்கோ என உன்னிடம் சொல்லிட்டு போறேன் என கூறுகிறார்.

மேலே போன இனியா செழியனிடம் ஜெனி அக்காவால அம்மா என்ன அடிச்சுட்டாங்க என கூறுகிறார். நான் அவங்க சொல்றத கேட்கல என் அம்மாகிட்ட சொல்லி என்ன அடி வாங்க வச்சுட்டாங்க இனிமே ஜெனி அக்கா கிட்ட பேச மாட்டேன் என இனியா அழுகிறார். நான் பசங்கள பாத்த வழியறனா, ஜெனி அக்கா ஏன் அப்படி சொல்றாங்க என அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார். பிறகு செழியன் ஜெனி இனிமே உன்ன ஒன்னுமே சொல்ல மாட்டா. அவகிட்ட நான் பேசுற என இனியாவை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்.

இந்த பக்கம் ஜெனி இனியவை பாக்கியா அடித்துவிட்டது பற்றி பாக்கியாடம் பேசுகிறார். அவகிட்ட நான் பேசுறேன் என கூறுகிறார். திரும்பவும் அடிக்காதீங்க என சொல்ல இல்ல அடிக்க மாட்டேன் என பாக்கியா கூறுகிறார். பிறகு பாக்கியா இனியா ரூமுக்கு செல்கிறார். அப்போது இனியா என் பேச்சை யாரும் கேட்கலை. நான் அந்த பிசியோதெரபிஸ்ட் கிட்ட பேசினா இவங்களுக்கு என்ன. இவங்க எதுக்கு என்ன கீழே வராதன்னு சொல்லணும்.

பிறகு பாக்கியா நீ சின்ன பொண்ணு உன்னோட நல்லதுக்கு தான் ஜெனி சொன்னா‌ என சொல்ல அப்போ என்ன பண்றது தப்பா என் இனியா சொல்கிறார். ஜெனி அக்கா சொல்றத கேட்டு வந்து பேசுறியா என கேட்க ஜெனி ஒன்னுமே சொல்லல சரி நீ சொல்லு என கேட்க இனியாவும் மழுப்பலாக சொல்கிறார். பிறகு பாக்கியா நீ பண்றது நான் ஒன்னும் கவனிக்கல நினச்சிட்டு இருக்கியா? வீட்ல இருக்கும்போது இந்த மாதிரி துணி எதுக்கு? அந்த பிசியோதெரபிஸ்ட் என்ன ஒரு மூணு மாசம் வருவாரா அதுக்கப்புறம். எதுக்கு இப்படி நேரத்தை வீண் பண்ற? பசங்கள பார்த்தா இப்போ ஆசையாத்தான் இருக்கும் பேசணும்னு தோணும் ஆனா அதையெல்லாம் தாண்டி வாழ்க்கையை பற்றி யோசி என கூறுகிறார்.

வீட்ல ஏற்கனவே பல பிரச்சனை இருக்கு நீ ஏன் தேவையில்லாம பிரச்சனையை கிளப்பி விடாத என சொல்ல இனிய இனிமே நான் அவ கிட்ட பேசல போதுமா ஆள விடுங்க என கூறுகிறார். பிறகு கோபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இனிய எங்கே எனக் கேட்க அவ அப்புறம் சாப்பிடுகிறான் என்று சொல்லிவிட்டார் என கூறுகிறார். இனி அவை கூப்பிட சொல்லி கோபி சொல்ல பாக்கியா இனியாவை அழைக்கிறார். ‌‌‌‌‌

எனக்கு ஒன்றும் வேண்டாம் பசி இல்ல நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன் என இனிய சொல்லிவிட்டு கதவை சாத்திட்டு விடுகிறார். சாப்பிட்டு முடித்த கோபி இனியாவுக்கு இட்லியை எடுத்து வைத்துக் கொண்டு மேலே செல்கிறார். நீ எதுக்கு இனியாவை திட்டின உன்னால தான் இவ்வளவு பிரச்சனை என செழியன் ஜெனியை திட்டுகிறார். உடனே பாக்கியா இனி அவர் கேள்வி கேட்கிற எல்லா உரிமையும் அவளுக்கு இருக்கு நீ முதல்ல ஒழுங்கா நடந்துக்க கத்துக்க. வேலையை பாரு திட்டி விடுகிறார்.

மேலே கோபி இனியாவின் ரூம் கதவை தட்ட அம்மாவாகத்தான் இருக்கும் என இனியா கதவைத் திறக்காமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். பிறகு கோபி குரல் கொடுத்த இனியா அப்பா என ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து வெளியான புரோமோ வீடியோவில் இந்த வீட்டுக்காக நீ என்ன பண்ண என பாக்கியாவுடன் கோபி வாக்குவாதத்தில் ஈடுபட அப்போது ஈஸ்வரி கையில் நகை பெட்டிகளை எடுத்து வந்து கொடுக்கிறார். இதனால் கோபி அதிர்ச்சி அடைகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.