செத்திடுவேன் பிளாக்மெயில் செய்த கோபிக்கு ராதிகா பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவை சந்தித்து உனக்குள் என் கூட வாழனும்னு ஆசை இல்லையா எப்பயாவது உன்னுடைய பதிலை வெளிப்படையா சொல்லு என கேட்க எனக்கும் ஆசை இருக்கு என ராதிகா சொல்கிறார். அப்புறம் எதுக்கு ரெண்டு பேரும் தனித்தனியா இருக்கணும் நாம ரெண்டு பேரும் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழலாம் என கோபி சொல்ல ராதிகா ஆரம்பத்துல எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்துச்சு ஆசைகள் இருந்துச்சு ஆனால் உங்களுடைய மனைவி யார் என்று தெரிந்ததும் அது எல்லாமே சுக்கு நூறா உடைந்து போச்சு. இப்போ உங்ககிட்ட பேசிட்டு இருக்கும்போது என் மனசுக்குள்ள எவ்வளவு வலி இருக்கு எவ்வளவு பரிதவிப்பு இருக்குன்னு எனக்கு மட்டும்தான் தெரியும் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க என சொல்கிறார்.

இந்த நேரத்தில் ஸ்கூலில் இருந்து வெளியே வரும் பாக்கியா இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். கோபி நீ இல்லன்னா நான் செத்துடுவேன் இது தவிர எனக்கு வேற வழி இல்ல என சொல்ல அதிர்ச்சியான ராதிகா இப்படி எல்லாம் பெரிய வார்த்தை பேசாதீங்க, எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் யோசிச்சு பதில் சொல்றேன். எல்லாம் நல்லதாக நடக்கும் இப்போதைக்கு என்னால் இந்த இடத்தில் இது மட்டும் தான் சொல்ல முடியும் என சொல்லி ராதிகா கிளம்பி விடுகிறார்.

பாக்கியா யாருடன் அவர் எப்படி இருந்தார் எனக்கென்ன நான் எதுக்கு வருத்தப்படணும் என யோசித்துக் கொண்டேன் பைக்கில் செல்கிறார். இந்த பக்கம் ராதிகா நான் என்ன முடிவு எடுக்கிறது கோபியை கல்யாணம் பண்ண முடிவு எடுத்தால் நான் தப்பானவளா ஆயிட மாட்டேனா? மயூவுக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு அவர் இருந்தா அவ சந்தோஷமா இருக்கா அப்படி இருக்கும்போது நான் ஏன் கோபியை கல்யாணம் பண்ணிக்க கூடாது என யோசித்துக் கொண்டே செல்கிறார்.

பின்னர் வீட்டுக்கு வந்த பாக்கியவிடம் என்னாச்சு என கேட்க அவர் பணம் கட்டிட்டாரு என சொல்ல செல்வி இந்த விஷயம் வீட்ல தெரிஞ்சா எல்லாரும் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடுவாங்க என சொல்லிக் கொண்டிருக்க அப்போது ஜெனி வளையல் எங்கே என கேட்க செல்வி அடகு வைத்த விஷயத்தை சொல்கிறார். இந்த நேரத்தில் கோபி போன் செய்கிறேன் பாக்யா உன்னால எதுவும் செய்ய முடியாது. அந்த வீட்டுக்கு என்ன வேணுமோ எனக்கு இன்பர்மேஷன் மட்டும் குடு நான் பண்ணுறேன் அது என்னுடைய கடமை. நீ ஒரு ஓட்டு நீ உன்னால தனியா எதையும் சாதிக்க முடியாது என கண்ட மேனிக்கு பேச கடுப்பாகும் பாக்கியா போனை கட் செய்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.