பழனிச்சாமி கல்யாணம் செய்ய சொல்லி ராதிகா பேச பாக்கியா பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ராதிகா அவர்களுக்குள் வந்தது கோபி பின்னாடி கோபமாக வந்து இப்ப என்ன திரும்பவும் தலைவலியா என்று கேட்க ஆமா கொஞ்சமாக இருந்த தலைவலி இப்ப மண்ட வெடிக்கிற மாதிரி இருக்கு என சொல்கிறார். 

எனக்காக நீ சப்போர்ட் பண்ணி பேசுன்னு கூட்டிட்டு போனா நீ என்ன பண்ணி வச்சிருக்க என்று கேள்வி கேட்க ராதிகா உங்களுக்கு இன்னமும் பாக்கியா மேல பாசம் குறையல. என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் உங்க ஞாபகம் எல்லாம் பாக்கியா மேல தான் இருக்கு அப்போ நான் எதுக்கு இங்க இருக்கனும் கிளம்பவா என்று சொல்லி கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார். 

இந்த நேரம் ஈஸ்வரி ரூமுக்கு வந்து இங்கேயும் வந்து என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்கியா தொட்டு தாலி கட்டண புடிச்ச மரியாதை இல்லாம எல்லாரும் முன்னாடியும் அவமானப்படுத்தி பேசுற என்று கேள்வி கேட்க ராதிகா அப்ப இவர் என் புருஷன் நான் உங்க மருமகள்னு ஒத்துக்குறீங்க நாளைக்கு எல்லாரும் மாதிரி எனக்கும் இந்த வீட்ல மரியாதை குடுப்பீங்க என்னையும் ஒரு ஆளா மதிப்பீங்க அப்படித்தானே என்று கேள்வி கேட்டு ஈஸ்வரிக்கு ஆப்பு வைக்கிறார். 

மறுபக்கம் பாக்கியா தலைவலியுடன் இருக்க எழில் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்து ஆறுதல் சொல்கிறார். எல்லோரும் செழியன் மற்றும் ராதிகா பாக்யாவுக்கு ஆதரவாக பேசியதை நினைத்து ஆச்சரியப்படுகின்றனர். 

இனியா படிக்கட்டுல உக்காந்து போன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த கோபி இனியாவுக்காக செய்த விஷயங்களை சொல்லி காட்டி எனக்கு ஒரு பிரச்சனை வரும் போது நீ என்கூட நிக்கல என்று கேள்வி கேட்க என்ன உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஆனாலும் நீங்க அம்மாவ பத்தி பேசினது ரொம்ப தப்பு இப்பவும் நான் அம்மா பக்கம்தான் என ஷாக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார். 

பிறகு பாக்கியா இப்ப நீ வேலை செய்து கொண்டிருக்க அங்கு வந்த ராதிகா உங்ககிட்ட ஒன்னு சொல்லலாமா என்று சொல்லி உங்களுக்கு இப்ப 40 வயசு தான் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க உங்களுக்கும் ஒரு சப்போர்ட் வேண்டும் நீங்க ஒரு கல்யாணம் பண்ணிக்கங்க என்று கூறுகிறார். அதுவும் உங்களுக்கு நல்லா தெரிஞ்ச உங்களோட நல்ல பிரெண்டான பழனிச்சாமியை கூட கல்யாணம் பண்ணிக்கோங்க என்று சொல்ல பாக்கியா செல்வியை கூப்பிட்டு கல்யாணம் பண்ணவங்க எல்லாம் சந்தோஷமா இருக்காங்களா என கேட்கிறார். 

செல்வி நான் எதுக்கு கல்யாணம் பண்ணனும்னு தெரியல கல்யாணம் பண்ணாம இருந்திருந்தாலே சந்தோஷமா இருந்துச்சு எல்லா பொம்பளையும் இப்படித்தான் சொல்லுவாங்க என்று சொல்ல ராதிகா கிட்ட இதே கேள்வியை கேளு என கூறுகிறார். ராதிகாவிடம் நீங்க சந்தோஷமா இருக்கீங்களா மேடம் என்று கேட்க பதில் சொல்ல முடியாமல் சாரி கேட்டு அங்கிருந்து நகர்கிறார் ராதிகா. 

பிறகு கோபி ராத்திரியில் தூங்காமல் இருக்க ஈஸ்வரி என்னப்பா தூக்கம் வரலையா என்று கேட்டு பாக்கியா பழனிச்சாமி ராதிகா மூன்று பேரும் சேர்ந்து ஒரேடியா ஆடுறாங்க. இப்போ என் நிலைமை தான் பரிதாபமா இருக்கு என புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.