![IMG_20220730_074407](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/07/IMG_20220730_074407-696x447.jpg)
திரும்பவும் பாக்கியா வீட்டுக்கு வர கோபி அதிர்ச்சியாகி உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா பீச்சில் எழிலிடம் நான் எடுத்த முடிவு தவறில்லையே என கேட்க நிச்சயம் தப்பு கிடையாது. பிடிக்காத வாழ்க்கையை எதற்கு இவ்வளவு நாளா வாழ்ந்த? நீ எப்பயோ வர விட்டுப் போய் இருக்கணும் எங்களை பத்தி நீ எதையும் யோசிக்காத இருக்கிற கொஞ்சம் வாழ்க்கையாவது உன்ன பத்தி யோசிச்சு உனக்கு சந்தோஷம் கிடைக்குற மாதிரி வாழு என கூறுகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/07/IMG_20220729_071945-1.jpg)
மறுநாள் காலையில் பாக்கியா எழிலிடம் வெளியே போயிட்டு வரலாம் என சொல்லி வீட்டுக்கு அழைக்கிறார். இந்த பக்கம் வீட்டில் எல்லோரும் பாக்கியா குறித்து பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் பாக்கியா எழிலுடன் வந்து இறங்குகிறார். இனியா, ஜெனி என எல்லோரும் ஓடிச்சென்று பாக்கியாவை வரவேற்கின்றனர்.
நீ வந்துவிடுவ என்று எனக்கு தெரியும் என இனியா கூறுகிறார். நாங்க எல்லாரும் கூப்பிட்டு உன்னால வராம இருக்க முடியாது என எனக்கு தெரியும் என ஈஸ்வரி சொல்கிறார். பிறகு இனியா ஓடிப்போய் கோபியிடம் அம்மா வந்துட்டாங்க என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். கோபியை கீழே கூப்பிட அவர் நீ போ நான் அப்புறம் வருகிறேன் என சொல்கிறார். எனக்கு இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா கூட திரும்பவும் சண்டை போடாதீங்க. நாம் எல்லோரும் சந்தோஷமா இருக்கலாம் என இனியா கூறுகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/07/IMG_20220730_074434.jpg)
அதன் பிறகு பாக்யா நான் குளிச்சிட்டு வரேன் என மேலே செல்கிறார். ஈஸ்வரி எழிலையும் போய் நீயும் குளிச்சிட்டு வா என அனுப்பி வைக்கிறார். மேலே போன பாக்கியாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து நன்றி கூறுகிறார் இனியா. அதன் பிறகு பாக்யா கோபி ரூமை திறந்து உள்ளே செல்ல கோபி அதர்ச்சியோடு பார்க்க இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.