கோபியை படாத பாடு படுத்துகின்றனர் அம்மாவும் மாமியாரும். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபியை வீட்டுக்கு வரவைத்து ஈஸ்வரி இவ காபி கொடுக்கிற மாதிரி கொடுத்து தட்டி விட்டுட்டா என்று சொல்ல கமலா நானா தட்டிவிட்டேன்? நீங்களே கீழே போட்டுட்டு இப்படி பேசாதீங்க என்று இருவரும் சேர்ந்து மாறி மாறி வாக்குவாதம் செய்ய கோபி அம்மாவை கூட்டிக்கொண்டு கிச்சனுக்கு வருகிறார். 

கிச்சனில் ஈஸ்வரியை உட்கார வைத்துவிட்டு வேலை சரியாக நடக்காததால் எல்லோரிடமும் டென்ஷனாக பேசிக்கொண்டு இருக்கிறார். மறுபக்கம் ஜெனி நான் எதுக்குமே லாயக்கு இல்ல அமிர்தா வீட்ல இருந்து இருந்தா எல்லாத்தையும் சரியா பார்த்திருப்பாங்க என்று கண்ணீர் விட்டு கலங்குகிறார். பாக்கியா அப்படி எல்லாம் ஒண்ணுமே கிடையாது இந்த ரெண்டு பேருமே நல்ல பொண்ணுங்க தான். நீ எதுக்கு இப்படி எல்லாம் நினைச்சிட்டு இருக்க என்று ஆறுதல் சொல்கிறார். 

இதை தொடர்ந்து ஈஸ்வரி கிச்சனில் என்ன இப்படி எல்லாம் கூட்டிட்டு வந்து அலைய வைக்காத என்னால முடியல என்று சொல்லி வீட்டுக்கு அழைத்து வருகிறார். வீட்டுக்கு வந்ததும் கமலா அம்மா அங்க தான் குழந்தைங்கள கூட்டிட்டு போய் பார்த்து இருக்கேன் ஆனா இங்க அப்படியே தலைகீழாக இருக்கு என்று பிரச்சனையை கிளப்ப ஈஸ்வரி பதிலுக்கு வாக்குவாதம் செய்ய இருவரும் மாறி மாறி சத்தம் போடுகின்றனர்.

ஈஸ்வரி இனிமேல் இவ இங்கே இருக்கக் கூடாது.. இப்பவே வெளியே போக சொல்லு என்று கோபியிடம் சொல்கிறார். இதனால் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.