ஈஸ்வரிக்கு சட்னி வைத்து பாக்கியா செழியனுக்கு கண்டிஷன் போட்டுள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய மெகா சங்கமம் எபிசோடில் முத்துவேல் குடும்பத்தில் எல்லோரும் காலையில் எழுந்து கல்யாணத்துக்கு ரெடியாகின்றனர்.  

வடிவு ராஜியை எழுப்ப போக மாரி வேண்டாம் அக்கா காபி போட்டுட்டு எழுப்பலாம் என்று சொல்லி காபி போட்டு வடிவு ரூமுக்கு போக ராஜி இல்லாததை பார்த்து குழப்பம் அடைகிறார். பிறகு மாரியிடம் விஷயத்தை சொல்ல இருவரும் சேர்ந்து எல்லா இடமும் தேடுகின்றனர்.  ‌ 

மறுபக்கம் ஈஸ்வரி குழந்தையை வைத்துக்கொண்டு காரில் தூங்கிவிட செழியன் முகத்தை கழுவ கீழே இறங்கி வர ஜெனி குழந்தையை எங்கே தூக்கிட்டு போன சரியா எனக்கு ரொம்ப பயமா இருக்கு அவளுக்கு ஃபீட் பண்ணனும் குழந்தையை என்கிட்ட கொடுத்துடு என வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார்.

உடனே பாக்யா செழியனுக்கு போன் போட்டு எங்க இருக்க எதுக்கு இப்படி பண்றீங்க என்ன திட்டி பாட்டியிடம் திருநெல்வேலி தான் போகிறோம் என்று சொல்லி இங்க கூட்டிட்டு வா எந்த பிரச்சனையா இருந்தாலும் சேர்ந்து சமாளிக்கலாம் என சொல்ல செழியன் சம்மதிக்கிறார். 

இங்கே ராஜியை காணாமல் எல்லோரும் பதறுகின்றனர்‌. உறவினர் ஒருவர் நைட் ஒரு பொண்ணு ஒரு பையனோட பேக்கோட போச்சு என்று சொல்ல இன்னொருத்தர் நான் கூட பார்த்தேன் கார்ல ஏறி போனாங்க ஆனா அது ராஜியா இருக்கும்னு எனக்கு தோணல என்று சொல்ல இவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். 

வடிவு அவ இந்த கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டே இருந்தா நாங்க தான் கேட்கல என்று அழுது புலம்ப முத்துவேல் முதல்ல வேண்டாம்னு சொன்னா அதுக்கப்புறம் ஒத்துக்கிட்டா என்று சொல்கிறார். இருந்தாலும் நீங்க சொல்ற மாதிரி எங்க பொண்ணு ஓடிப் போய் இருக்க மாட்டா அவளை நாங்க அப்படி வளர்க்கவில்லை என்று சொல்கின்றனர்.

பிறகு மாரி லெட்டர் ஏதாவது எழுதி வச்சிருக்காலா என்று ரூமுக்கு வந்து தேடிப் பார்க்க நகை காணாமல் போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்து அந்த விஷயத்தை சொல்ல எல்லோரும் இன்னும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போ ஓடிப்போனது ராஜி தான் என ஊர் ஜனங்கள் எல்லாரும் முத்துவேல் குடும்பத்தை அவமானப்படுத்தி பேசுகின்றனர். 

பழனி ஓடி வந்து இந்த விஷயத்தை பாண்டியனிடம் சொல்ல இதைக் கேட்டு இவர்களும் அதிர்ச்சி அடைகின்றனர். பாண்டியன் சரவணன், செந்திலை ஓடிப் போய் தேடி பார்க்க சொல்கிறார். 

அதைத்தொடர்ந்து கண்ணன் ராஜியை கூட்டிக்கொண்டு திருச்செந்தூர் ஹோட்டலுக்கு வர ராஜீ நான் வீட்டுக்கு போறேன் என்று சொல்ல கண்ணன் அவளை திட்டி கோபப்பட்டு ஹோட்டலுக்குள் அழைத்து வர பாக்கியா இதை பார்த்து சந்தேகம் கொள்கிறார். 

இங்கே பாண்டியன் வெளியே வர ஊர்க்காரர்கள் முத்துவேல் சக்திவேல் குடும்பத்தை அவமானப்படுத்தி பேசிக் கொண்டிருக்க சக்திவேல் கோபப்பட்டு கல்யாணம் நடக்கும் தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்காதீங்க என வாக்குவாதம் செய்ய பொண்ணு ஒழுங்கா வளக்க துப்பில்லை பேச்ச பாரு என அவமானப்படுத்துகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.