ராதிகா மற்றும் கமலாவுக்கு கோபி அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அந்த ஆள் பக்கத்துல எல்லாம் உட்கார முடியாது என்று சொல்ல செழியன் அப்படி என்றால் கார் ஓட்டு என்று சொல்லி கோபி பக்கத்தில் உட்கார்ந்து வருகிறார். கோபி போதையில் புலம்பிய வர இந்த நேரம் பார்த்து பாக்யா போன் செய்ய எழில் சமாளிக்க முயற்சி செய்கிறார். 

எழில் செழியன் பெயரை கேட்டதும் கோபி அவன் என் பையன் என்று புலம்ப பாக்கியா எங்க இருக்க என்று கேட்டது எழில் உண்மையை சொல்கிறார்.

அதன் பிறகு செழியன் கோபியை ராதிகா வீட்டிற்கு கொண்டு வந்து விட ராதிகா கோபியை பார்த்து குடிச்சு இருக்கீங்களா என்று கேள்வி கேட்கிறார். கமலா இது என்ன கேள்வி பார்த்தா தெரியலையா என்று சொல்ல கோபி யாருமா நீ அமைதியா இரு என்று திட்டுகிறார். 

சந்தோஷம் எல்லாமே போச்சு என் மனசுக்குள்ள ஆயிரம் பிரச்சனை.. நானும் என் பொண்டாட்டியும் சந்தோஷமா இருந்தோம் அது அம்மா அந்த கமலா வந்தா.. சரியான பிசாசு பிசாசு என்று திட்டுகிறார். கோபி பார்த்து பேசுங்க என்று ராதிகா கோபப்பட அவளால தான் எல்லா பிரச்சனையும் என்று கோபி கமலாவை திட்டுகிறார். இனிமேல் அவங்களுக்கு மரியாதை எல்லாம் தர போறது இல்ல என்று சொல்கிறார். இதனால் கமலா பாத்தியா எனக்கு இதெல்லாம் தேவையா என்று புலம்புகிறார். 

அடுத்ததாக மறுநாள் காலையில் பாக்யா உட்பட எல்லோரும் கோவிலுக்கு வர ஈஸ்வரி பழைய நினைவுகளை பற்றி பேசி சந்தோஷப்படுகிறார். பிறகு போன் வந்ததும் வெளியே செல்லும் பாக்கியா சாவித்திரி உடன் உள்ளே வர ஈஸ்வரி யார் என்று தெரியாமல் இருக்க சாவித்திரி தன்னை அறிமுகம் செய்தது ஆனந்த கண்ணீருடன் கட்டிப்பிடித்து சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.