ரூமுக்குள் நடந்த வாக்குவாதத்தில் கடைசியில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சின்ன துறையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் செழியன் ரூமுக்குள் தள்ளி கதவை சாத்தியதும் ஜெனியை பார்த்து ஷாக்காக ஜென்னி செழியனை பார்த்து சாக்காகி நீதான் வெளிய கதவை போட்டுட்டு உள்ள வந்தியா என்று கோபப்பட செழியன் வெளியே கூட்டிட்டு எப்படி உள்ளே வர முடியும் என்று கேட்க நீ பண்ணுவ எல்லாத்தையும் பண்ணுவ என்று கோபப்படுகிறார்.

கதவைத் திறக்க சொல்லி கதவை தட்டிக் கொண்டே இருக்க செழியன் ஜெனி இதுவரைக்கும் நான் எவ்வளவோ முறை உன் கிட்ட பேசணும்னு முயற்சி பண்ணேன், ஆனா என்னால பேச முடியல இந்த முறை பேசுகிறேன் தயவுசெய்து நான் பேசுறது கொஞ்சம் கேளு என்று சொல்ல உன்கிட்ட நான் எதுக்கு பேசணும் பேசறதுக்கு எதுவுமே இல்லை என்று கோபப்படுகிறார்.

உன்னை எனக்கு எவ்வளவு வருஷமா தெரியும் எவ்வளவு லவ் பண்ணி போராடி கல்யாணம் பண்ணும் அப்படி இருந்து உனக்கு அந்த மாதிரி முக்கியமா போய்ட்டாளா என்று கோபப்படுகிறார். நான் செஞ்சது தப்புதான் என்னை மன்னித்து ஏற்றுக் கொள் என்று கெஞ்ச ஜெனி அது மட்டும் முடியவே முடியாது என சொல்கிறார்.

செழியன் நீ இல்லன்னா நான் செத்துப் போயிடுவேன் என்று சொல்ல உன் கூட இருந்தா நான் செத்துப் போயிடுவேன் என்று ஜெனி சொல்ல இதையெல்லாம் கேட்டு வெளியில் இருப்பவர்கள் பதறுகின்றனர். ஜெனி திரும்பவும் கதவை தட்ட மறியல் திறக்க போக பாக்கிய வேண்டாம் வெயிட் பண்ணலாம் என தடுத்து நிறுத்துகிறார்.

பிறகு செடியன் நான் என்ன பண்ணா என்ன நம்புவ என்று சொல்ல நீ என்ன பண்ணாலும் உன்னை நம்ப மாட்டேன் என்று கோபப்பட காலில் விழுந்து கெஞ்ச எழுந்திரு என்று கோபப்பட நீ என்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லாம நான் எழுந்துக்க மாட்டேன் காலை பிடித்தபடி இருக்கிறார்.

பிறகு திடீரென சத்தம் இல்லாமல் இருக்க வெளியில் நிற்பார்கள் எல்லோரும் பார்க்கிற எழில் நான் போய் பாத்தட்டு வரேன் என்று சொல்ல பாக்யா வேண்டாம் கொஞ்சம் வெயிட் பண்ணலாம். என சொல்கிறார். பிறகு ஜெனி செழியனை பளார் பளார் என அறைகிறார்.

எப்படி உனக்கு எனக்கு துரோகம் பண்ண மனசு வந்துச்சு என்று பேச இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சொல்ல இதெல்லாம் நீ ஒரு காரணமாக சொல்லுவியா என்று ஜெனி கோபப்படுகிறார். மீண்டும் செழியனை போட்டு அறைகிறார். மீண்டும் உள்ளே அமைதி நிலவ வெளியில இருப்பவர்கள் ஓடி வந்து கதவை திறக்க இருவரும் கட்டிப்பிடித்து நிற்க அதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.