![Screenshot_2024-06-25-08-24-48-42_f9ee0578fe1cc94de7482bd41accb329](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/Screenshot_2024-06-25-08-24-48-42_f9ee0578fe1cc94de7482bd41accb329-1-696x410.jpg)
மீண்டும் குடிகாரனாக மாறியுள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ராமமூர்த்தி கூப்பிட்டு அத்தைய அவங்க ஆசைப்பட்ட மாதிரி கும்பகோணம் கோயிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வரலாம் என்று சொல்ல முதலில் தயங்கும் ராமமூர்த்தி பிறகு சம்மதம் சொல்கிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/Screenshot_2024-06-25-08-24-17-12_f9ee0578fe1cc94de7482bd41accb329-1.jpg)
இதையடுத்து ரெஸ்டாரன்ட் வந்த கோபி பாக்கியா சொல்லிய வார்த்தைகளால் பயங்கர டென்ஷனோடு யோசித்தபடி இருக்கிறார். இங்கே பாக்கியா எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஈஸ்வரியை அழைத்து கொண்டு கோவிலுக்கு செல்லும் விஷயத்தை சொல்லி இனியாவையும் கூப்பிடுகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/Screenshot_2024-06-25-08-24-02-70_f9ee0578fe1cc94de7482bd41accb329-1.jpg)
இனியா கோவில் என்பதால் தயக்கம் காட்ட பாக்கியா திட்டி ஓகே சொல்ல வைக்கிறார். அதன் பிறகு கோபி தனது நண்பனை வர வைத்து அளவுக்கு அதிகமாக குடித்து தனது வாழ்க்கை பற்றி புலம்புகிறார். குடிபோதையில் வீட்டுக்கு வர ராதிகா கோபியிடம் பேசிய மயூவை திட்டி உள்ளே அனுப்புகிறாள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.