பாக்கியாவுக்கு திரும்பவும் அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஈஸ்வரி. ‌

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை இழுத்து வந்து இனிமே பாக்கியா விஷயத்தில் தலையிட கூடாது என கண்டிஷன் போடுகிறார். 

அதை தொடர்ந்து வீட்டில் பாக்கியா என்னென்ன செய்வது என எழில், அமிர்தாவுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது செழியன் அங்கு வந்து பணம் ஏதாவது தேவையா என கேட்க பாக்கியா அதெல்லாம் எதுவும் வேண்டாம் என சொல்கிறார். செழியனின் நிலையை கண்டு கவலைப்படுகிறார்கள். 

அடுத்து பொருட்காட்சியில் சமைக்க தேவையான பொருட்களை வேனில் ஏற்றி அனுப்பி வைக்க செழியன் ஓடி வந்து பாக்கியாவுக்கு உதவி செய்கிறார். 

அதன் பிறகு கொட்டும் மழையை பார்த்து எல்லோரும் கவலைப்பட நாளைக்கு எல்லாம் சரியாகிடும் என பாக்கியா நம்பிக்கையாக பேசுகிறார். அதன் பிறகு மழை விடாமல் பெய்வதை பார்த்து கோபி நக்கலாக பேச ஈஸ்வரி அந்த காண்ட்ராக்ட்டை திருப்பி அவங்க கிட்டயே கொடுத்துடு என அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.