ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டிற்கு சென்ற ஈஸ்வரி அங்கு கோபியை தேட ராதிகா கோபி இங்க இல்லை எங்கள புரிஞ்சுக்கோங்க என சொல்ல கோபி இங்கே இருந்தாலும் இல்ல முடிஞ்சி வச்சிருக்க தானே என சொல்ல ராதிகா அதிர்ச்சியடைகிறார். வீட்டில் உள்ள எல்லோரையும் அசிங்கப்படுத்தி பேச ஒரு கட்டத்தில் கோபமான ராதிகா போதும் நிறுத்துங்க உங்க புள்ளையால நானும் தான் காயப்பட்டு இருக்கேன். ஒவ்வொருத்தரா வந்து என் அம்மாவையும் அண்ணாவையும் இப்படி பேசும்போது என்னால் பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியாது. எது பேசுவதாக இருந்தாலும் உங்க புள்ள கிட்ட பேசிட்டு இருங்க இப்போ வெளியே போங்க என ஈஸ்வரியை வெளியே அனுப்புகிறார்.

எழில் ஆபீஸில் தயாரிப்பாளர் கதையில் சில மாற்றங்களை சொல்லி இருந்தேன் மாற்றி விட்டாயா என கேட்க அப்படி மாத்துனா கதையோட போக்கே மாறிடும் என எது ஒரு இயக்குனராக சொல்கிறேன் என சொல்ல தயாரிப்பாளர் நீங்க எல்லாம் என்ன மனு செய்ய பணம் போட்டு படம் எடுக்கிறவன் நான் சொல்றேன் மாத்த முடியாதா? நான் சொன்னது மாத்திட்டு கதையை எடுத்துட்டு வந்து கொடு, மத்ததை அப்புறம் பேசிக்கலாம் என சொல்லி அனுப்புகிறார். இதனால் எழில் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார்.

பிறகு ராதிகா வீட்டிலிருந்து வீட்டுக்கு வந்த ஈஸ்வரி எல்லாத்துக்கும் காரணம் பாக்கியால் தான் இப்போ என்ன பண்ணுறது கோபி நேரம் அந்த ராதிகா வீட்ல போய் நின்னு இருக்கான். இதெல்லாம் வெளில தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம் குடும்ப மானமே போகும் என பேசிக்கொண்டு இருக்க இந்த நேரத்தில் ஜெனியின் அம்மா வீட்டுக்கு வர குடும்பத்தார் அதிர்ச்சி அடைகின்றனர்.

இந்த விஷயத்தை மூடி மறைக்கும் முயற்சி செய்ய ஒரு கட்டத்தில் ஜெனியின் அம்மா நான் கேள்விப்பட்டதெல்லாம் அப்போ உண்மைதானா என கேட்க ஜெனி அவரை உள்ளே அழைத்துச் சென்று இப்ப எதுக்கு இங்க வந்து இதையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்க என கேட்க இதையெல்லாம் நீங்கதான் சொல்லி இருக்கணும் எப்படி இருந்தாலும் ஒரு நாள் வெளியே தானே தெரியப்போகுது நான் என் பொண்ணு வாழற வீடுன்னு இல்ல அக்கறையில் தான் கேட்க வந்தேன் என பேசுகிறார்.

செழியன் இப்போ உங்களுக்கு சந்தோஷமா? இந்த விஷயம் எல்லா சொந்தக்காரங்களுக்கும் தெரிய தான் போகுது ஒவ்வொருத்தரா வந்து கேட்க தான் போறாங்க. என் மாமியார் எனக்கு போன் பண்ணி உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் டிவோர்ஸ் ஆயிடுச்சு கேட்டபோது எனக்கு எப்படி இருந்திருக்கும் என சத்தம் போடுகிறார். பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.