ஈஸ்வரி கோபிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு ஈஸ்வரி பாக்யாவை பார்த்து பேசி வீட்டிற்கு அழைக்க அவர் நான் எப்படி அந்த வீட்டுக்கு வருது நான் வரல. திரும்பத் திரும்ப இதையே சொல்றதால உங்களை மதிக்காம பேசுறனு மட்டும் நினைச்சுடாதீங்க என உறுதியாக கூறிவிடுகிறார்.

இந்த பக்கம் மயூராவுக்கு காய்ச்சல் குறையாத காரணத்தினால் அவரை ஊருக்கு அழைத்துச் செல்லக்கூடாது உடம்பு சரியாகும் அதன் பிறகு போய்க்கொள் என ராதிகாவின் அம்மாவும் அண்ணாவும் கூறுகின்றனர்.

வீட்டில் ஈஸ்வரி கணவரிடம் பாக்யா நான் கூப்பிடும் வரவில்லை என சொல்லிட்டா என சொல்லி வருத்தப்பட அவ அதிகமா காயப்பட்டு இருக்கா என வேணுகோபால் கூறுகிறார். இந்த நேரத்தில் கோபி கீழே வர செழியன் அவரை அழைத்து பாட்டி பொய் அம்மாவ கூப்பிட்டாங்க ஆனா அவங்க வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க அதனால பாட்டி அம்மா மேல கோவமா இருக்காங்க என கூறுகிறார்.

உடனே ஈஸ்வரி நான் பாக்கியா மேல கோவமா இருக்கேன்னு சொன்னனா என சத்தம் போடுகிறார். இப்படி ஒரு விஷயத்தை செஞ்சுட்டு உன்னால் எப்படி இந்த வீட்ல நடமாட முடியுது எங்க முகத்தை எப்படி பார்க்க முடியாது என கோபியை பார்த்து கேள்வி பதில் கேள்வி கேட்கிறார். பாக்யா மட்டும் இந்த வீட்டுக்கு வரலைன்னா அவங்க அம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சு அவங்க வந்து உன்னை நிக்க வச்சு கேள்வி கேப்பாங்க என்ன பதில் சொல்லப் போற என கேட்கிறார்.

அது மட்டுமல்ல ஜெனியோட வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சா அவங்களும் வந்து விசாரிப்பாங்க மருமகளை வச்சுக்கிட்டு செய்யற வேலையா இது என கேப்பாங்க. சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா என்ன பதில் சொல்றது இது எல்லாம் யோசிக்காமல் இப்படி பண்ணிட்டு நிக்கிற என திட்டுகிறார். பாக்கியா இந்த வீட்டுக்கு வரலைன்னா நாங்க யாரும் இருக்க மாட்டோம். உன் சந்தோஷம் தான் முக்கியம் என்று இப்படி பண்ணல சந்தோஷமா இரு என்று சொல்லிட்டு நாங்கள் எல்லோரும் கிளம்பி போய்கிட்டு இருப்போம். அதோட செத்தா கூட எங்க முகத்துல முழிக்க கூடாது என ஈஸ்வரி சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

பாக்கியா மட்டும் உங்க வீட்டுக்கு வரலைன்னா உன்னை நான் சும்மா விடமாட்டேன். இப்ப கூட அவ இந்த வீட்டுக்கு வருவான்னு ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் பேசிக்கிட்டு இருக்கேன் என கோபிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறார் ஈஸ்வரி. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.