எழில் செய்த வேலையால் பாக்கியா விடுதலையாகி வெளியே வந்துள்ளார்.
Baakiyalakshmi Episode Update 20.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. எழில் சாப்பாட்டை டெஸ்ட் செய்வதற்காக தெருத்தெருவாக அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது சதீஷ் போன் செய்து ஏதாவது பாசிட்டிவாக நடந்ததா என்னாச்சு என கேட்க எழில் எதுவும் நடக்கல சாப்பாட்டை பரிசோதனை செய்ய அலைந்து கொண்டு இருக்கிறேன் எங்கே போவது என்ன செய்வது என தெரியவில்லை எனக் கூறுகிறார்.
பிறகு எழிலுக்கு ஜானு போன் செய்து நான் அப்பாவிடம் பேசினேன் உனக்கு எங்கே போகணும் என்ன செய்யணும்னு முகவரியை அனுப்பி இருக்கேன் அங்க போயிட்டு அப்பாவோட பெயர் மட்டும் சொல்லு மத்தது எல்லாம் அவங்க பாத்துப்பாங்க என கூறுகிறார். எழிலும் சரியென நேராக அந்த முகவரிக்கு சென்று சாப்பாடு கொடுத்து பரிசோதனை செய்யச் சொல்கிறார். மறுநாள் காலை வருமாறு சொல்லி அனுப்பி வைக்கின்றனர்.
மறுநாள் காலையில் ராதிகா வீட்டில் கோபி வருத்தத்தோடு உட்கார்ந்து கொண்டிருக்க அப்போது பேப்பரில் பாக்யாவின் போட்டோ போட்டு ராதிகாவின் பெயர் போட்டு செய்தி வந்து இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார். இங்க பாருங்க கோபி பேப்பர்ல என்னோட பேர் போட்டு இருக்காங்க என ராதிகா சொல்ல விடு பாத்துக்கலாம் போட்டோ எதுவும் வரல, அதுவரைக்கும் சந்தோஷம் என சொல்கிறார்.
எழில் மீண்டும் அந்த இடத்திற்குச் சென்று சாப்பாடுகளை பரிசோதனை செய்த ரிசல்ட் வாங்கி வருகிறார். சாப்பாட்டு எந்த பிரச்சனையும் இல்ல சாப்பாடு பரிமாறின லட்டில் தான் பிரச்சனை என கூறுகின்றனர். இதை எனில் வீட்டிற்கு வந்து சொன்னபோது செல்வி நாங்க லட்டு கொடுக்கல வேற ஒருத்தர் தான் கொடுத்தாங்க என சொல்ல உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி உண்மையைச் சொல்ல அவர்கள் நீதிமன்றத்தில் பேசிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிடுகின்றனர்.
நீதிமன்றத்தில் ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என அவரை இது வழக்கிலிருந்து விடுதலை செய்கின்றனர். பிறகு பாக்கியா விடுதலையாகி வெளியே வந்ததும் தனது இரண்டு மகன்களையும் கட்டியணைத்து கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பின்னர் வெளியான புரோமோ வீடியோவில் கோபி வீட்டுக்கு வர ஈஸ்வரி நைட்டு எங்கேயோ போய் தங்கிட்டு இப்ப வந்து கேட்கிற என சத்தம் போடுகிறார். அதற்குள் கோபியின் அப்பா எழுந்து கோபியை அடித்து விடுகிறார். இந்த காட்சிகள் நாளை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.